உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, March 29, 2007

கிறுக்குத்தனங்களை கிறுக்கச்சொன்னா...?.

தமிழ் பிளாக் நண்பர்களிடையே உலவும் வியர்ட் விளையாட்டில் என்னையும் உந்தி தள்ளியிருக்கிறார்கள் அன்பர்கள் யோசிப்பவரும், ஈரோடு பீம்பாயும்.
ஐந்து வியர்டான கிறுக்குத்தனமான காரியங்கள் அவரவர்களைப்பற்றி சொல்வ வேண்டுமாம்.அதுதான் இந்த விளையாட்டு.நண்பர் தாஸூ "லூசு மக்கா" வென சுடச்சுட பரவலாக நோட்டமிட்டு hightlights-ம் வழங்குகிறார்.
நாலு ஜோக் சொல்ல சொன்னா சொல்லிடலாம் இப்படி கிறுக்குத்தனங்களை கிறுக்கச்சொன்னா...?. :)

இனி நம்மளை பற்றி சில வரிகள்.இவை வியர்டு ஆட்டத்தில் வருமானு தெரியவில்லை.

இவர்க்கு எதையாவது பண்ணனும் நெனச்சா வொடனே பண்ணியாகனும். இல்லைனா தலையே வெடிச்சிடும் போலாயிடும்.பொறுமையே கிடையாது.முக்கியமா வேலை சம்பந்தமா..., யாராவது பொறுமை பொறுமைனு சொன்னாலும்,பொறுமையா இருப்பது போல் நடித்து விட்டு ஆனால் தலையில் உச்ச பிரஷரில் இரத்தம் ஓடும்.
டென்சன் டென்சன் டென்சன்.சமீபத்தில் கார் இருக்கைகளின் இடையே வாலட்டை தொலைத்துவிட்டு ஊர் முழுக்க தேடி ஒரே டென்சன்.செல்போனும் அடிக்கடி இவ்வாறு விளையாடுகிறது.

அதெப்படி ஆமை வேகத்தில் டிரைவ்பண்ணுகிறார்கள்னு தெரியலை.,"Move your ass"-ன்னு "மனதில்" திட்டிக் கொண்டே விரைதலோடு சரி.ஏசுதல் பேசுதல் ரொம்ப கம்மி.You are a good listener-னு யாரோ சொன்னார்கள், Silence is golden-னு வாத்தியார் ஆட்டோகிராபிட்டார்.ஆயிரம் எழுதமட்டும் லாயக்கு.சரியான ஏட்டுசுரைக்காய்.

உனக்கு ரொம்ப ஈகோனு அவள் சொன்னாள்.இவளும் சொன்னாள்.அப்படினா என்னனு இன்னுவரை தெரியவில்லை.அதான் ஈகோவோ.

நம்பத்தகு நண்பர்கள் குழுமினால் லூட்டி.நண்பர்கள் வருகிறார்கள் போகிறார்கள்.சத்தியமாய் யாரோடும் சண்டை போட்டதில்லை.Definitly Something wrong with me.மெயின்டெயின் பண்ணத்தெரியவில்லை போலும்.

"Sixth Sense" பார்த்து ரொம்ப பயந்தேன்.இதெல்லாம் ஒரு scary மூவியானு நண்பர்கள் சிரித்தார்கள். தமிழ் படங்களில் ஏற்கனவே பார்த்த படத்தை மட்டுமே பார்க்க பிடிக்குது.புதுசாய் பார்க்க பயம்.அப்படித் தரம்.சூழ்நிலை காரணமாய் புதுசாய் பார்த்தா உண்டு.

நண்பர்கள் யோசிப்பவருக்கும், ஈரோடு பீம்பாய்க்கும் நன்றிகள் பல.

இப்போ ரிலேயை யாரிடம் கொடுக்கனு தெரியலை.யாராவது வாங்கினால் கோடி நன்றிகள்.
:)


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



1 comment:

யோசிப்பவர் said...

//தமிழ் படங்களில் ஏற்கனவே பார்த்த படத்தை மட்டுமே பார்க்க பிடிக்குது.புதுசாய் பார்க்க பயம்.அப்படித் தரம்.சூழ்நிலை காரணமாய் புதுசாய் பார்த்தா உண்டு.
//

இது எனக்கும் கொஞ்சம் உண்டு!!!;-)

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்