உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, May 02, 2007

பக்காவாய் அழித்தல்

பொதுவாக நாம் கணிணியிலிருந்து அழிக்கும் கோப்புகள் தற்காலிகமாக ரீசைக்கிள்பின் போய் தங்கியிருக்கும். எப்போது வேண்டுமானாலும் அந்த கோப்புகளை நாம் அங்கிருந்து மீட்டுக்கொள்ளலாம். ஆனால் ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழிக்கப்பட்டு போய்விட்டால் என்ன பண்ணுவது? இந்த இக்கடான சூழலில் இங்கே பாருங்கள் எனது பழைய பதிவு ஒன்று உதவும்.அதன் பொருள் என்னவென்றால் கோப்புகளை அழித்ததால் அக்கோப்புகள் காணாமல் போய்விட்டன...யாரும் மீட்க முடியாது என மெத்தனமாய் நினைக்க வேண்டாம்.உண்மையில் அவை எங்கோ உங்கள் டிஸ்கில் ஒளிந்து இருக்கின்றன.சரியான மென்பொருள்களை பயன்படுத்தினால் அதை மீட்டுக்கொள்ளலாம். இதை தடுக்க அதாவது உங்கள் சென்சிடிவ் கோப்புகளை பக்காவாய் முழுதுமாய் அழிக்க யாரும் மீட்டெடுக்க முடியாத படி செய்ய கீழ்க்கண்ட மென்பொருள்களை பயன்படுத்தலாம்.இவை முற்றிலும் உங்கள் கோப்புகளை டிஸ்கிலிருந்து அழித்துவிடும்.பைனான்ஸ் போன்ற முக்கிய தகவல்களை கையாளும் நிறுவனங்கள் தங்கள் பழைய டிஸ்களை அழிக்க எடுக்கும் பிரணயத்தன முயற்சிகள் ஆச்சர்யத்தை தரும். அத்தனை கடினமாம்.

http://www.download.com/AbsoluteShield-File-Shredder/3000-2092_4-10164976.html?tag=lst-0-1

http://www.tucows.com/preview/394108


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்