உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, October 24, 2008

கிபி 0001-ல் இந்தியா

புள்ளிவிவரங்களுக்கேற்ப உலக நாடுகளின் வரைபடத்தை பெரிதாக்கியும் சிறிதாக்கியும் வெவ்வேறு அளவுகளில் வரைந்து பல விஷயங்களை நமக்கு எளிதாக புரியவைப்பதில் கில்லாடிகள் Worldmapper.org காரர்கள். அவர்கள் வரைந்திட்டுள்ள உலகவரைபடங்கள் பல கதைகளை சொல்லும்.

கீழே நீங்கள் காண்பது கிபி 1-ல் உலகின் ஐஸ்வர்யம் பொருந்திய நாடுகளின் மேப். இந்தியா என்னமாய் பெருத்திருந்திருக்கின்றதென பாருங்கள்.

அப்போதெல்லாம் மாதம் மும்மாரி பொழிந்திருக்கின்றது. செல்வச்செழிப்பில் இருந்திருக்கின்றோம். விலைமதிக்க இயலாத பொக்கிஷங்கள் இங்கிருந்தன. கோவில்களிலும் அரண்மனைகளிலும் இருந்த வேலைப்பாடுகளுக்கு விலை குறிக்க முடியாது. மயிலாசனம் முதல் கோகினூர் வைரம் வரை இங்கிருந்தன. வாசனை திரவியங்கள், யானை தந்தங்கள், பூம்பருத்தி ஆடைகள் இவற்றுடன் மயிலும் மிளகும் ஏற்றுமதி ஆயின. அவற்றிற்கு பதிலாக பொன்னும் மணியும் வந்து குவிந்தன. திரைகடல் ஓடியும் திரவியம் தேடினர். பலதுறைகளிலும் வல்லுனர்கள் இருந்தார்கள். இப்படி ”கிபி ஒன்றில்” இந்தியா பெருத்திருந்தது. அடுத்து நம்மை நெருங்கி வந்தது சீனா மட்டுமே. அமெரிக்காவும் ஐரோப்பாவும் அப்போது ஒல்லிப்பிச்சான்களாய் இருந்தன.

1835-ல் பாரதபூமியை சுற்றி பார்த்த ஒரு பிரிட்டீஷ்காரரின் வாக்குமூலத்தை பாருங்கள்.

இந்த நிலை கிபி 1500 வரை நீடித்தது.

அப்புறம் வந்த எந்திர தொழில்புரட்சி மேற்கை பருமனாக்கியது என்கின்றார்கள்.

1900-ல் உலகம் செல்வச்செழிப்பின்படி.


ஆப்ரிக்க நாடுகள் இன்னும் தேய்ந்து கழுதை கட்டெறும்பாகிக்கொண்டிருக்க 2015-ல் சீனா வீங்கி விட்டதையெல்லாம் மீட்டெடுக்கும் என ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.

2015-ல் உலகம் செல்வச்செழிப்பின்படி.




”நாம் இந்தியாவுக்கு மிகவும்
கடன் பட்டுள்ளோம்.
எண்களைக் கொண்டு
எண்ணச் சொல்லிக்
கொடுத்தவர்கள் அவர்கள்தாம்.
அது இன்றி நாம்
மிகப்பெரிய அறிவியல்
கண்டுபிடிப்புகளையெல்லாம்
கண்டுபிடித்திருக்க இயலாது”
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் கடல்கன்னி ராணி காமிக்ஸ் படக்கதை இங்கே தமிழில் மென் புத்தகமாக. James Bond Kadalkanni Rani Comics in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



4 comments:

கூடுதுறை said...

சூப்பர் படங்கள்...

எங்கே ஒரு வாரமாக காணோம்?

தென்றல்sankar said...

//நாம் இந்தியாவுக்கு மிகவும்
கடன் பட்டுள்ளோம்.
எண்களைக் கொண்டு
எண்ணச் சொல்லிக்
கொடுத்தவர்கள் அவர்கள்தாம்.
அது இன்றி நாம்
மிகப்பெரிய அறிவியல்
கண்டுபிடிப்புகளையெல்லாம்
கண்டுபிடித்திருக்க இயலாது”
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்//

உண்மையாகவா? மிகவும் பெருமையாக இருக்கிறது.

அதிரை தங்க செல்வராஜன் said...

Dear PKP,

If China will get back, Why not WE?

With regards

Thangaselvarajan

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் பிகேபியனந்தா,


நிறைய பேர் இந்தியாவின் ஐஸ்வர்யங்கள் என்றால் கொள்ளை போன கோஹினூர், தார்யா-இ-நூர் மற்றும் நூர்-ல்-ஐன் போன்ற வைரங்களும் மயிலாசனமும் அதைப்போன்ற மற்ற விலைமதிக்க முடியாது என்று கருதப்பட்டு உண்மையில் விலை குறிக்கப்பட்ட அற்ப பொருட்கள்தான். இதற்கு முன்பு நானும் உங்களைப்போல் தான கருதினேன்.


ஆனால் இந்தியதேசத்தின் உண்மையான விலை மதிப்பற்ற ஐஸ்வர்யங்கள் எவையன்றால் இந்த தேசத்தின் ஆன்மீக பலமும், அதன் வழியில் உழைக்க தயாராக இருக்கும் இளைய கூட்டத்தின் தன்னம்பிக்கை தான். சிறிய உதாரணம் - உங்களைப்போல் , என்னைப்போல் மற்றும் ITZ-ல் இருந்த உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் இந்திய இளைய கூட்டம்தான். என்ன வியப்பாக உள்ளதா? அது தான் உண்மையுங்கூட.


மேதகு அப்துல் கலாம் அவர்கள் தனது நூலில் திப்பு சுல்தானின் ஏவுகணைகளை பற்றி விவரித்து இருப்பார். அதில் ஒரு NRI இந்தியர் மேலை நாடுகள் தான் இத்தொழில் நுட்பத்தில் சிறந்தவை எனக்கருத்து கொண்டிருப்பார். அவரிடம் இந்த தொழில் நுட்பத்தை இந்தியாவிலிருந்து தான் இங்கு கொண்டு வந்து அதனை உபயோகப்படுத்தியதை நிருபித்த உடன் அந்த NRI 'ஙே' என்று விழிப்பார். அவரைக் கூறி குற்றமில்லை. அவர் படித்த மெக்காலேயின் கல்வி அப்படியாக்கிவிட்டது. நல்லவேளை நான் ஒரு PHD தான். அதாவது Passed Higher-secondary with Difficulty. நல்ல பாருங்க எல்லாமே CAPS தான். அதுசரி நீங்களும் என்னை போல ஒரு PHD தானா?


அதனால் தான் நாங்கள் அப்துல் கலாம் அவர்களை செல்லமாக 'இரண்டாம் ஜம்பாவானந்தா ' என்றழைப்போம். ஏனெனில் முதல் ஜம்பாவானந்தா அனுமன் தன் சுய திறமைகளை மறந்து அந்த NRI போல இருந்த போது அனுமனின் கடந்த காலத்தை நினைவுட்டி வங்காள விரிகுடாவை தாண்ட வைத்தார். இந்திய இளைஞர்களில் பெரும்பான்மையினர் தங்களது சுயவரலாற்றை மறந்து அனுமன் போல வாழ்கிறார்கள். அவர்களுக்கு மேற்கூறிய வகையில் சிகிச்சை அளித்தால் இந்தியா மறுபடியும் கிபி 0001-ல் இருந்த்து போல் சிறப்பான தேசமாகிவிடும்.


with care and love,

Muhammad Ismail .H, PHD,

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்