உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, September 27, 2012

நின்றால் விழுந்துவிடும் தினமும் ஓட வேண்டும்.

கல்வியே இப்படி கடும் வாலடைலாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.
நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை.
இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும்.
ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான்.
நின்றால் விழுந்துவிடும் தினமும் ஓட வேண்டும்.
சில அடிப்படைகள் இறைவனால் இயற்கையாக வகுக்கப்பட்டவைகள் மட்டுமே மாறாமல் இருக்கும் என்றைக்கும்.
இரண்டு கைகள் என படித்தல், அது காலத்தால் மாறத கல்வி. அது கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என படிக்க தொடங்கினால் என்றைக்கு முடியும்.
”21-ம் நூற்றாண்டின் எழுதப்படிக்க தெரியாதவர்கள், உண்மையிலேயே எழுதப்படிக்க தெரியாதவர்களல்ல. கற்க மறக்க மீண்டும் கற்க இயலாதவர்களே அவர்கள்” என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஆல்வின் டாப்லரின் கூற்று நினைவுக்கு வருகின்றது.
நின்றால் விழுந்துவிடும் தினமும் ஓட வேண்டும்.
Follow me in Facebook
http://www.facebook.com/pkpblog


Email PostDownload this post as PDF

Friday, September 21, 2012

நீரில் பொறிக்கிறோம்


ஆயிரம் தான் ஆனாலும் காகித நூலில் படிக்கும் சுகம் வருமானு சொல்லிக் கொண்டே கொட்டாவியை விடும் நபரா நீங்கள்? உங்களுக்கு ஒரு செய்தி. உங்கள் அபிமான நூற்செல்வங்களையெல்லாம் இப்போது கிடைக்கும் போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வரும் தலைமுறையினருக்கு பொக்கிஷமாகட்டும். சீக்கிரத்தில் பல நூல்களும் காகித வடிவில் கிடைக்காமல் போகும் அபாயம். உபயமும் உபாயமும் இந்த கணிணியுகம். மின்நூல்களை எளிதில்  தயாரிக்க முடிவதாலும் கணப்பொழுதில் கணக்கின்றி  விற்க முடிவதாலும் பதிப்பாளார்களும் மின்நூல்களையே தெரிவு செய்கின்றனர். அமெரிக்காவில் இந்த வருடம் காகிதபுத்தகங்களைவிட மென்புத்தகங்கள் அதிகமாக விற்று சாதனை படைத்திருக்கிறது. சில என்சைக்ளபிடியாக்கள் கூட காகித பதிப்புகளை கைவிட முடிவு செய்துள்ளன. பல நன்மைகள் இருந்தாலும் தொல்லைகள் தான் நம் கண்ணில் தெரிகின்றது. கணிணிசார் பதிப்புகள் நிலைப்புதன்மையும் நம்பகத்தன்மையும் இல்லாததே முக்கிய காரணம். ஆன்லைனில் உண்மையும் பொய்யும் நிலவ அதின் நிஜத்தை கண்டுபிடிக்க வாசகன் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் நூலக புத்தகங்களில் படிப்பவற்றை வேதவாக்காக எடுத்துகொள்கிறோம். இன்றைக்கிருக்கும் URLகள் மற்றும் மின்புத்தகங்கள் நாளை வாழ்வதில்லை. சமீபத்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளின் அடிச்சுவடுகளை கூட நாம் ஆன்லைனில் சீக்கிரத்தில் இழந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வள்ளுவர் கால வாழ்வை அவர் சுவடிகள் கல்லில் எழுதப்பட்ட எழுத்துபோல் நமக்காக பதிவு செய்துவைத்திருந்தன. இன்றைக்கும் பயன்பெறுகிறோம். போன வருடம் எகிப்தில்  நடந்து முடிந்ததே மாபெரும் புரட்சி, அதை வரும் காலத்துக்கு எடுத்துச் சொல்ல எங்கே பதிவு செய்துவைத்திருக்கிறோம்?


Email PostDownload this post as PDF

Saturday, September 15, 2012

அண்ட்ராய்ட் பயன்பாடுகள் இப்போது விண்டோஸ் கணிணியிலும்

தொழில்நுட்ப பதிவு போட்டு ரொம்பநாளாகி விட்டது. தொழில்நுட்பங்களை நொடிக்கு நொடி விளாசி பேசும் தளங்கள் பெருகிவிட்டதும், எந்த ஒரு சமாசாரமுமே எழுத உந்தும் அளவு மனதை பாதிக்காததும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். எங்கிருந்தோ திடீரென்று வந்த நண்பர் ஒருவர் ஒரு நல்ல தகவலை சொல்லிச் சென்றார். அந்த நண்பருக்கு நன்றிகள் பல.உங்கள் அண்ட்ராய்ட் செல்பேசிகளில் நீங்கள் பயன்படுத்தும் உங்கள் அபிமான பயன்பாடுகளை இப்போது விண்டோஸ் கணிணியிடும் பயன்படுத்தலாமாம். BlueStacks app player எனும் மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிவிட்டால் போதுமானது. அதே மொபைல் அப்ளிகேசன் பெரிய திரையில் உங்கள் கணிணியில் நல்ல வேகமாக ஓடுமாம். அப்ளிகேசன் டெவலப் செய்பவர்கள் கூட இதை சோதனைக்காக பயன்படுத்திக் கொள்ளலாமென நினைக்கிறேன். நல்ல புதுமையான முயற்சி. பீட்டாவாக இப்போது இருக்கும் போது இலவசம். முழுமையானதும் விற்கப்படலாம். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சொல்லிட்டேன் எம்லின் சார்.நன்றி.
Follow me in Facebook
http://www.facebook.com/pkpblog


Email PostDownload this post as PDF

Monday, September 03, 2012

ஆறு வார்த்தைகளில்



Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்