உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, June 25, 2009

சாணக்கியன் சொன்னது

கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார்.அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.

மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.

இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.

உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.

ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.

ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.

பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.

ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.

மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.

ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.

உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.
தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.

குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.

கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்.

சம்பந்தப்பட்ட இன்னொரு பதிவு
பெருசு சொன்னது (ஐன்ஸ்டீன்)


சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை!


ஞா.தேவநேய பாவாணர் ”தமிழர் திருமணம்” மென்புத்தகம் இங்கே தமிழில்.Ja.Thevaneya Paavaanar "Thamilar Thirumanam" in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Wednesday, June 10, 2009

சாதாரண பிரிண்டரிலிருந்து புத்தகம்

காகிதத்தின் இருபக்கத்திலும் பிரிண்ட் செய்யும் வசதி உள்ள (இதை Duplexing என்பார்கள்) பிரிண்டர் உங்களிடம் இல்லாவிடினும் சாதாரண மலிவு பிரிண்டர் மூலம் கூட தாளின் இருபக்கமும் அச்சிட்டு ஒரு புத்தகம் போல செய்யலாம் என நம் நண்பர் முகம்மது இஸ்மாயில் விளக்கியிருந்தார். அது எப்படி என அனைவருக்கும் பயன்படட்டுமேயென இங்கு ஒரு பதிவாகவேயிடுகிறேன்.

”விலை அதிகம் உள்ள பிரிண்டர்களில் தான் ஒரே நேரத்தில் இருபுறமும் அச்சிட இயலும். ஆனால் Canon LBP2900 போன்ற விலை குறைவான Entry Level Printer களிலும் இதை செய்ய இயலும். அதற்கான வழிமுறை இதோ,,,

மொத்தம் 150 page உள்ள doc.file லை புத்தகம் போல பிரிண்ட்செய்ய வேண்டி உள்ளது என்றால் 75 காகிதத்தை மட்டும் பிரிண்டரின் ட்ரேயில் வைக்கவும். இல்லை அதைவிட அதிகமாக வைத்தாலும் பிரச்சினை இல்லை.

பிறகு படத்தில் உள்ளபடி Print Range - All, மற்றும் Print - Odd Pages என செலக்ட் செய்யவும். இப்ப பிரிண்ட் கொடுத்தால் 1,3,5,7 ….. 149 வரை பிரிண்ட் ஆகி பிரிண்டருக்கு வெளியே அடுக்கி வைத்துவிடும்.

பிறகு ட்ரேயில் மீதம் உள்ள வெற்று தாள்களை எடுத்துவிட்டு பிரிண்ட் ஆகி வந்த 1 to 149 Odd Pages 75 சரியாக ட்ரே உள்ளே வைத்து மறுபடியும் ப்ரிண்ட் கொடுக்கவும். இப்ப அதில் Even pages என செலக்ட் செய்யவும். இப்ப பிரிண்ட் கொடுத்தால் 2,4,6,8 ….. 150 வரை பிரிண்ட் ஆகி பிரிண்டருக்கு வெளியே அடுக்கி வைத்துவிடும். அவ்வளவுதான் விஷயம்.

குறிப்பு - இதில் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் பிரிண்டரானது பிரிண்ட் பண்ணி அடுக்கும் முறை தான். அதில் சரியான பக்கத்தை வைத்தால் தான் இரண்டு பக்க பிரிண்டிங் சாத்தியம். இல்லையென்றால் ஒரே காகிதத்தின் ஒரே பக்கத்திலேயே இரண்டு பக்கத்தையும் பிரிண்ட் செய்துவிடும். அல்லது அடுத்த பக்கத்தை தலைகீழாக பிரிண்ட் செய்யவும் வாய்ப்புள்ளது. ஆகவே உங்கள் Document முதல் நான்கு பக்கத்தை மட்டும் சோதனை முறையில் வெறும் இரண்டு காகித்தை வைத்து பிரிண்ட் செய்து இதை நன்றாக புரிந்து செய்யவும். தற்போதுள்ள பொருளாதார மந்தநிலையில் தேவையற்ற வீணடிப்பு சோதனைகள் வேண்டாம். LOL.”

நன்றி முகம்மது இஸ்மாயில்!!

xMax எனப்படும் wireless technology குறித்து அவர் விசாரித்து கேட்டிருந்தார். சுத்தமாக எனக்கு பரிச்சயம் இல்லாததால் மவுனமே எஞ்சியது. இந்நுட்பத்தை நம்மில் யாராவது பயன்படுத்தி இருந்தால் அனுபவத்தை சொல்லலாமே. பதிலுதவியாய் இருக்கும்.

"நண்பன் - உங்களுக்கு நீங்களே வழங்கிக் கொள்ளும் பரிசு” என்றார் ஒருவர். பரிசுகளினால் பயன் உண்டு. ஆனால் அவற்றை விலை கொடுக்காமல் வாங்கமுடியாது. உண்மைதான்.

ண்பர்கள் சிலர் மென்புத்தகங்களை இறக்கம் செய்ய முடியவில்லையே என புகார் சொல்லியிருந்தார்கள். தீர்வாக http://www.scribd.com -ல் ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.

லையில் சிக்கிய ஒரு தமிழ் MP3 தொகுப்பு உங்கள் பார்வைக்கு.
http://www.nkdreams.com/music/index.php?dir=


குழந்தையின் மழலை,
பைத்தியக்காரனின் பிதற்றல்,
மகானின் பொன்மொழி
இவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை உண்டு.இலேசில் புரியாது.










உமா பாலகுமார் புதினம்
”சகியென சரணடைந்தேன்” மென்புத்தகம்.
Uma Balakumar "Sakiyena Saranadaithen"
novel in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Saturday, June 06, 2009

பேசுங்க பேசுங்க


புதுசு புதுசா புதுப் புது வழிகளை கண்டுபிடித்து நம்மாட்கள் VOIP செய்வதும் அதை எப்படியாவது blog அல்லது forum-களை நோண்டி கண்டுபிடித்து அந்த VOIP இணையதளங்களையும் போர்ட்களையும் தடைசெய்வதும் வளைகுடாநாடுகளில் ISP அட்மின்களுக்கும் எக்ஸ்பேட்களுக்கும் இடையே நடக்கும் ஒரு மவுனப் போராட்டம். அள்ளிக்கொண்டு வரும் வெள்ளத்தை பிஞ்சு கைகள் கொண்டு தடை செய்ய முயல்வது போல பெருக்கெடுத்து வரும் தொழில்நுட்ப நன்மைகளை கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள். கடலிலிருக்கும் உப்பையெல்லாம் எடுத்து தரையில் கொட்டினால் உலகம் முழுக்க 500 அடி உயரம் வரைக்கும் அது நிரம்பி கிடக்குமாம். அதற்காக இலவசமாக உப்பைக் கொடுக்கச் சொல்லவில்லை. உப்பைபோல விலை குறைத்துக் கொடுக்கலாமே.

http://betacalls.com என ஒரு தளத்தை நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்தியிருந்தார். 10 டாலருக்கு 333 நிமிடம் வரைக்கும் பேசலாமாம். Hotspot போன்ற VPN மென்பொருள்கள் எதுவும் தேவையில்லை. முயன்றுபார்த்து சொல்லுங்கள்.

அதுபோல http://www.nettelsip.com (NetTelePhone) என ஒரு தளம் UAE-யிலிருந்து இந்தியாவிற்கு பேச நிமிடத்திற்கு 0.069 அமெரிக்க டாலர் வாங்குகிறார்களாம். அவர்கள் தளத்திலேயே UAE-யின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதால் ஒருவேளை இத்தளம் சட்டப்படி அனுமதிபெற்றே நடத்தப்படுகின்றதோ என்னமோ? குறைந்த விலையிலேயே நிறையப் பேசலாம்.

“உலகில் முதல் பேசும் கருவியை கண்டுபிடித்தவன் நானல்ல. அது கடவுள்தான். நான் கண்டு பிடித்த கருவியை இடையிலேயே நிறுத்தி பேசவிடாமல் செய்ய முடியும். ஆனால் இறைவன் கண்டு பிடித்த கருவியோ பேச ஆரம்பித்தால் அப்புறம் அதை நிறுத்தவே முடியாது. அந்த கருவிதான் பெண்கள்” என வேடிக்கையாக ஒருமுறை பிரபல விஞ்ஞானி எடிசன் அவர்கள் பேசியதாக சொல்வார்கள். பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க.

Torrent ஐப் போலவே ஒரே Click ல் ஆங்கிலப் படங்களை download செய்வதற்கு மிகச் சிறந்த வலை தளம் என கீழ்கண்ட தளமொன்றை அறிமுகப் படுத்தியிருந்தார் இன்னொரு நண்பர்.
http://oneclickmoviez.com

தொடர்ந்து இதுபோன்ற பல பயனுள்ள நல்லத் தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.

பெருவாரியான பின்னூட்டங்கள் வழியும் மின்னஞ்சல்கள் வழியும் மீண்டும் மீண்டு வந்ததற்கு வாழ்த்துதல்கள் கூறி உற்சாகமூட்டிய அனைத்து இனிய நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். சில சமயங்களில் ஆச்சரியமாயிருக்கும் இத்தனை நண்பர்கள் எங்கிருந்து வந்தார்கள் எதற்காக வருகின்றார்கள் என்று.
இன்னொரு புரியாத புதிர்?!


மனிதன்
உணவின்றி 40 நாட்களும்
நீரின்றி 3 நாட்களும்
காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.
ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது.












தமிழ் மழலையர் கல்வி பாடல்கள் மென்புத்தகம்.Tamil Children Rhymes pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Wednesday, June 03, 2009

GPS-ம் WPS-ம்

தெல்லாம் சாத்தியமாவென யோசித்துக் கிடக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வேலை மெனக்கெட்டு நாம் ஆரம்பித்த பணியை வெற்றிகரமாக முடிந்தபின் அதற்கு உலகம் தரும் வரவேற்பு அந்த சுமையையெல்லாம் இலகுவான சுகமாக்கிவிடும். புகழ்மிக்க ஆயிரம் பக்க அபூர்வ அரபிக் நாவல் ஒன்றை தமிழ்படுத்த மெனக்கெடுவது போன்றது அப்பணி. கூகிள் மேப்பில் காணப்படும் ஸ்டிரீட் வியூ வசதியைக் கொண்டுவர தெருதெருவாகப் போய் வேலைமெனக்கெட்டு வீடியோபிடித்து கணிணியில் ஏற்றினார்களாம். இறுதியில் நல்ல வரவேற்பு. இது போல இன்னொரு கும்பலும் தெரு தெருவாக ஆட்களை அனுப்பியிருக்கின்றார்கள். ஆனால் இன்னொரு வேலை விஷயமாக.

ஒரு பொருளின் இருப்பிடத்தை கண்டறிய சேட்டலைட் வழியாலான ஜிபிஎஸ் (GPS) நுட்பங்கள் பிரபலமாயினும் அதின்மீதுள்ள நம்பிக்கை வல்லரசுகளுக்கே திகிலைத்தந்துள்ளன. உள்ள 24 சேட்டலைட் கும்பலில் ஒன்று செயலிழந்தாலும் நம் ஜிபிஎஸ் கருவிகள் சுணங்கிவிடுமாம். சியாட்டிலின் வானுயர் டவுண்டவுன் கட்டிடங்களினூடே கார் புகுந்ததும் இந்த ஜிபிஎஸ் கருவிகளால் சேட்டலைட்டை தொடர்புகொள்ள இயலாமல் போவதால் அவை கப்சிப்பாகின. இறைவனை வேண்டத்தொடங்குவோம்.

சேட்டலைட் நுட்பத்தை பயன்படுத்தாமல் அருகே இருக்கும் செல்போன் டவர்களை தொடர்புகொண்டு அது வழியாக நம் இருப்பிடத்தை கண்டறிவது இன்னொரு வழி. பேருந்தில் பயணிக்கும் போது நாம் ஊர்களைத் தாண்டிச் செல்லும்போது உங்கள் போனிலும் டவர் ஊர் பணகுடியிலிருந்து வள்ளியூருக்கு மாறுவதை கவனித்திருப்பீர்கள். ஆனாலும் ஒரு சின்னப் பிரச்சனை. அதுவால் வள்ளியூரில் நீங்கள் எந்த டீக்கடை முன்னால் டேராபோட்டுள்ளீர்கள் என மிகச்சரியாக சொல்ல முடியாது.

Wi-fi நான் எதிர்பார்த்த அளவுக்கு நம் ஊரில் புழக்கத்தில் இல்லை. குறுகிய டூரில் போன இடமெங்கும் ஒரு Wi-fi கூட கண்ணில் அகப்படாதது என் துரதிஷ்டமாகக் கூடயிருக்கலாம். இங்கே தெருவில் எங்கு போயினும் Wi-fiகள். பெரும்பாலும் Secured தான். இந்த Wi-fiகளை வைத்தே நாம் இருக்கும் இடத்தை அடையாளம் காணலாமென ஒரு கும்பலுக்கு தோண தெருத் தெருவாகப் போய் எந்த தெருவில் எந்தெந்த Wi-fi-க்கள் உள்ளன என குறிப்பெடுத்து ஒரு பெரிய டேட்டாபேசையே உருவாக்கியுள்ளனர் Skyhook காரர்கள். உலகமெங்கும் மொத்தம் பத்து லட்சம் Wi-fi களை குறித்து வைத்திருக்கின்றார்கள். உங்கள் இருப்பிடத்தை ஒருவர் கண்டறிய சேட்டலைட்டெல்லாம் போகவேண்டாம். பக்கத்தில் ஒரு Wi-fi இருந்தாலே போதும். Wi-Fi Positioning System (WPS) எனப்படும் இந்த நுட்பம் வழி இயங்கும் http://loki.com-ல் என் இருப்பிடத்தை கேட்டுப்பார்த்தேன் இரு நொடிகளில் மிகச் சரியாகச் சொன்னது. வழக்கமான என் GPS-சோ "Waiting for accuracy" - என சொல்லிக்கொண்டே இரு நிமிடம் எடுக்கும். அதுபோல துல்லியமும் மாறுபடுகின்றது. மேலே இடது படம்-WPS உதவி இல்லாமல் அவ்வளவு துல்லியமாக இல்லை, வலது படம்-WPS உதவியுடன் மிக துல்லியமாக இருக்கின்றது. இந்த மாதிரியான location aware பயன்பாடுகளால் நமக்கு நன்மைகள் என்னவாம்? உங்கள் இருப்பிடத்துக்கு மிக அருகிலுள்ள ஜெராக்ஸ் கடையை அல்லது மருந்து கடை எதுவென ஒரே சொடுக்கில் தெரிந்து கொள்ளலாம்.

கான் பட கோப்புகள் சிலசமயங்களில் தனியான .ico கோப்பாக வராமல் .exe அல்லது .dll கோப்புகளுக்குள் புதைந்து இரண்டற கலந்து ஒன்றாக வரும். இதுபோன்ற சமயங்களில் ஐகான் அல்லது .ico பட கோப்புகளை தனியாக பிரித்தெடுக்க icofx அல்லது GetIcons மென்பொருட்களை பயன்படுத்தலாம். சுட நல்ல டூல்.


முதியோர் சொல்லும்
முதுநெல்லியும்
ஒரே மாதிரி.
முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்.










புதுமைபித்தன் சிறுகதைகள் தொகுப்பு மென்புத்தகம். Puthumai Pithan Short Stories Collection in pdf ebook format Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்