உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, May 25, 2009

எலியின் மரணம்

புஷ்பங்கள் விழ விழ அது புதுசு புதுசாகவும் பூக்குமென ஒரு வசனம் உண்டு. ஒன்று போவதும் இன்னொன்று வருவதும் அது இயற்கையின் நியதி. மனிதர்கள் வரலாம் மனிதர்கள் போகலாம் ஆனால் நான் மட்டும் போய்க் கொண்டே இருக்கின்றேன் என ஒரு நதி பாடியதாக டென்னிசனின் கவி ஒன்றை படித்திருக்கிறேன். நம்ம டிப்பார்ட்மெண்டில் பார்த்தாலேயே தெரியும் ஆடியோ கேசட்டுகளை புதிதாய் வந்த ஆடியோ சிடிக்கள் சாப்பிட்டன. வீடியோ கேசட்டுகளை டிவிடிக்கள் விழுங்கின. பென்டிரைவுகளின் வரவால் ஃப்ளாப்பி டிரைவுகள் மரணித்தன. அடுத்து குண்டு மானிட்டர்கள், டவர் மேஜைக் கணிணிகள் என மறைந்துகொண்டிருப்பனவற்றின் வரிசையில் நம்ம சுட்டெலியும் (Mouse) சேர்ந்திருக்கின்றதாம். பிரபலமாகிக்கொண்டே வரும் தொடுதிரை உள்ளிடு முறைகளும், நம் கை அசைப்புகளுக்கும் வாய்மொழிகளுக்கும் விரல்ரேகைகளுக்கும் கீழ்படியும் திரைகளும் வந்து விட்டப்பின் மவுசின் மவுசு அடங்கிவிடும் போலிருக்கின்றது. ”அண்டகாகசம் அபுகாகாகசம் திறந்திடு சீசேம்” என அந்த காலத்திலேயே அலிபாபா கதையில் வாய்ஸ் ரெக்கக்னிசம் நுட்பத்தை நுழைத்து ரசித்திருக்கின்றார்கள். அற்புத விளக்கை தொடும் போதெல்லாம் அலாவுதீனின் முன் பூதம் தோன்றியதே. ஒருவேளை Fingerprint recognition-ஐ அன்றைக்கே சொல்லிச்சென்றார்களோ?. கதைகளிலும் காப்பியங்களிலும் வந்த கற்பனைகள் இன்றைக்கு நிஜமாகுதல் அங்கேயும் இன்னும் அநேக வரவிருக்கும் இன்னோவேசன்கள் புதைந்துகிடக்கலாமென காட்டுகின்றது.

மடிக்கணிணியை நமது வீட்டு HD டிவியோடு இணைத்து பெரிய 40 இஞ்ச் திரையில் வலை மேய்வது, யூடியூப் வீடியோக்களை பார்ப்பது, 10Megapixel போட்டோக்களை பார்ப்பது ரொம்பவும் ரம்மியமான விசயம். ஆனால் மடிக்கணிணியை இயக்க அதின் மவுசை கிளிக்க என ஒருவர் டிவி பக்கத்திலே ஒண்டிக்கிடக்க வேண்டுமாயிருக்கும். புதிதாக நான் அறியவந்த Air mouse உங்களிடமிருந்தால் நீங்கள் பத்தடி தள்ளி ஹாயாக சோபாவில் அமர்ந்திருந்து இந்த ரிமோட் மவுஸ் வழி மவுஸ் அம்புகுறியை நகர்த்தலாம், கிளிக்கலாம், டபுள் கிளிக்கலாம். எல்லா ஹோம் தியேட்டருக்கும் தேவையான ஒன்று. இன்றைய எக்கனாமிக் சூழலில் என் “Wish list"-ல் மட்டும் சேர்த்து வைத்திருக்கின்றேன்.


இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்












ஜெய்சக்தி ”வண்ணத்துப்பூச்சியாய்...” புதினம் மென்புத்தகம் இங்கே தமிழில்.Jaisakthi "VannaththupPoochiyaai..." novel in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Friday, May 22, 2009

கத்தியோடு புத்தி

வழ வழவென்று பேசிக்கொண்டே இருக்காமல் கொஞ்ச நாட்கள் கம்மென்றிருந்தது நன்றாகத்தான் இருந்தது. இன்றைக்கு சரியாக இரண்டு மாதங்கள். வசைகளும் வந்தன. விசாரிப்புகளும் வந்தன. இழப்பது நானும் என்பதால் சோம்பலை முறித்திருக்கின்றேன். ஓசியாய் கிடைக்கின்ற மாட்டுக்கும் சிலர் பல்லை பிடித்துப் பார்ப்பது வியப்பைத் தருகின்றது. நம் நடையின் போக்கை எதிரேவருபவன் தீர்மானிக்கக் கூடாது வென்பது கற்றுக்கொண்டது.

ஆயுதங்கள் ஜெயித்திருக்கின்றன என வரலாற்றில் படித்திருக்கின்றேன். அகிம்சையும் ஜெயிக்கும் என்றார்கள் பள்ளிக்கூட புத்தகத்தில். ஆனாலும் உருப்படியான உதாரணம் சொல்லத் தெரியவில்லை. பார்க்கப்போனால் ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம். அப்படியிருக்கும் வரை பொடியன்களை மொக்கைகள் ஒன்றும் செய்யமுடியாது.

குவைத் விமான நிலையத்தில் ஒரு காட்சி. ஒவ்வொரு இந்தியனும் செக்யூரிட்டி செக்கப் கவுண்டரை கடந்து செல்லச் செல்ல ஒருத்தி நாற்றம் நீக்கும் நறுமணநீர் போத்தலை பீச்சியடிக்கின்றாள். நம் வியர்வை துளிகள் அவர்களுக்கு நாறுகின்றதாம்.

ஃப்ராங்போர்ட் விமானநிலையத்தில் இன்னொரு காட்சி. ஏர் பிரான்சின் தவறுதலால் சரியான நேரத்தில் புறப்படாத விமானத்தில் பயணித்த இந்தியர்கள் நாதியற்று விமான நிலையத்திலேயே தவிக்க விடப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பல பேர் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பிற நாட்டினர்களுக்கு மட்டும் ஐந்து நட்சத்திர கவனிப்புகள். என்னவாச்சுது? ஜஸ்ட் நிறம் மட்டுமே இதற்கு காரணமா இல்லை நம்மை நாமே நாறடித்துக் கொண்டோமா? நம் சுய மரியாதையை நாம் எங்கே தவறவிட்டோம்?

அங்கே இன்னும் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கின்றது. போனமுறை செய்தது போல இந்த முறை புதிய நடுவணை வாழ்த்தி வரவேற்க மனம் இணங்கவில்லை.

”OUR BELOVED PKP PASSED AWAY!!
FOLLOWERS PLEASE CONVEY YOUR CONDELONCES.” என ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். பச்சை தமிழராய்தான் இருக்க முடியும். என்னே attitude!!

நண்பா! நான் செத்துப்போவேன். ஆனால் அவன் என்றைக்கும் சாகமாட்டான்.

விசாரித்து எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.


"வலுவான விதியே!
ஒரே ஒரு கோடைகாலம் எனக்கு அளி!
மெலிதான கானங்கள் நிறைந்த ஒரே ஒரு
வசந்தம் எனக்குக் கொடு
அந்த கானங்களை நிரப்பிக் கொண்டபின்
விருப்பத்தோடு என் இதயம்
இறக்கத் தயார்”
-ஃப்ரெட்ரிக் ஹோல்டர்வன்















சி.ஆர்.எஸ்-ன் கூல் ஆண் பெண் அறிய வைக்கும் உளவியல் மென்புத்தகம் இங்கே தமிழில்.C.R.S "Cool" psychology ebook in Tamil pdf Download.Click and Save.
Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்