காந்திமதி நாதன் என ஒரு வாத்தியார். சிறுவன் பாரதி படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். இவன் எழுதும் கவிதைகளைப் பற்றியெல்லாம் அதிகம் கேள்விப்பட்ட அவர் பாரதியிடம் கிண்டலாக கேட்டாராம். ”எங்கே! பாரதி சின்னப்பயல் என முடிகிற மாதிரி ஒரு கவிதை எழுது பார்க்கலாம்”. நொடியும் தாமதிக்காது பாரதி கவிதை சொன்னானாம்.
”காந்திமதி நாதனைப் பார்,
அதி சின்னப் பயல்” -என்று
நாமெல்லோரும் சின்னப்பயல்கள் தான். நாமென்ன நம்ம பூமியே இந்த மகா அண்டத்திலும் ஒரு சின்னப்பயலாம். இன்னும் கொஞ்சம் பெஞ்சிலேறி உந்திப் பார்த்தால் நம்ம சூரியனே கூட சின்னப்பயல் தானாம். இந்த அனிமேட்டட் ஜிப் படத்தை பாருங்கள். உங்களுக்கே புரியும். கொஞ்சம் பொறுமை வேண்டுமாக்கும்.
How big is Earth in the Universe
Watch slowly what happens!!! The picture will be changing
![]() அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது” -சர் ஐசக் நியூட்டன் |

Download

10 comments:
இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது
இனையமுகவரி :
டெக்னாலஜி.காம்
நல்ல உபயோகமான தகவல். நன்றிகள் பல.
பிரமிப்பாய் இருக்கிறது அண்ணே....
அருமை....
VY நட்சத்திரத்தோடு ஒப்பிட்டால், சுத்தமாக மட்டுப்படாத இதே பூமியில்தான் அன்பு, பாசம், காதல், பதவி,புகழ் போன்ற உணர்வுகளுடன் எதிர்மறையான பிரிவினை வெறிகளும், அதற்கான கலகங்களும்..
பேரண்டத்தில், நாமெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதுதான் கசப்பான உண்மை..
அது சரி.. கண்ணுக்குத்தெரியாத HIV-ம், H1N1-ம் தானே ஆபத்தானதாகயிருக்கிறது..
//”காந்திமதி நாதனைப் பார்,
அதி சின்னப் பயல்” //
super
//நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்//
supero supppper
மிகவும் நல்ல பதிவு
Hello sir nice and exciting image. i dont know how you are getting these type of images... i was your blogs unknown reader for nearly 2 years..you always have unique news
i put this image in my blog http://blogentertainmentworld.blogspot.com
Thank you,
வணக்கம் ஐயா..உங்களுடைய படைப்புகள் படித்து அறிவுறும் சிறுவன் நான்...நீங்கள் இணைய நூலகம்..அனைத்து தகவல்களும் அருமை..உங்கள் பழைய பதிவுகளை கூட விடாமல் தேடிப் பிடித்து படித்து கொண்டிருக்கிறேன்....வாழ்த்த தகுதியில்லை...வணங்குகிறேன்....நன்றி என்ற ஒரு வார்த்தையால் உங்கள் சேவையை குறைத்து மதிப்பிட விரும்ப வில்லை....வாழ்க வளர்க...----
உங்கள் அடிச்சுவடை பின்பற்றும் ஒருவன்...
like encyclopedia your blog give more informative news,i invite all my friend to view your blog...
"காரதுபோல் நெஞ்சிருண்ட
காந்திமதி நாதனைப் பாரதி சின்னப் பயல்"
நான் "சிறு வயதில்" பாரதியை பார்த்து வியந்த கவிதை.
உங்கள் எழுத்துகள் மேற்கோள்கள் மிகவும் அருமை.
Post a Comment