சூரியனை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் சனி போன்ற இயற்கை கோள்கள் நம்மிலே, நம் செயல்பாட்டிலே எந்த வித தாக்கங்களை ஏற்ப்படுத்துகின்றனவென திட்டமாய் தெரியவில்லை. ஆனால் பூமியை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் மனிதனின் செயற்கை கோள்கள்(Satellite) நம்மிலே, நம் செயல்பாட்டிலே அதிக தாக்கங்களை ஏற்ப்படுத்தி வருகின்றது உண்மையே.
உதாரணத்துக்கு சொல்லப்போனால் பூமி உருண்டையை இடைவிடாது சுற்றி வரும்
QuickBird, WorldView I போன்ற சேட்டலைட்கள் இன்றி கூகிள் எர்த் நமக்கு கிடைத்திருக்காது.
Global Navigation Satellite System-ன் அந்த 24 சேட்டலைட்கள் இன்றி அமெரிக்க கார்களின் GPS வேலை செய்யாது.
INSAT 4B இல்லாமல் சன் டிவியின் SunDTH நேரடி சேட்டலைட் வழி ஒளிபரப்பு சேவை நமக்கு கிடைத்திருக்காது.
இப்படி டிவி சேனல்களை கேபிள்களின்றி நாடுமுழுதும் ஒளிபரப்ப ,சுற்று புற சீதோஷண நிலையை மணிக்கு மணி தெரிந்துகொள்ள , கடலடி இண்டர்நெட் கேபிள் வெட்டுண்டு போனாலும் அவசரத்துக்கு இணையம் மேய, நமக்கப்பாலுள்ள அண்டங்களை ரொம்ப அவசியமாய் ஆராய, எதிரியின் தந்திர நகர்வுகளை கவனமாய் நோட்டமிட இப்படி பல உதவிகள் இந்த செயற்கை கோள்களால்.
அந்த காலத்து போர் தந்திரம் ஆரம்ப குறி எதிரியை புற உலகிலிருந்து துண்டிப்பது. சாலைகளை துண்டித்தல், பாலங்களை உடைத்தல், துறைமுகங்களை தகர்த்தல் இப்படி.
வரும் கால போர் தந்திரமும் இப்படியே தான் இருக்கும். ஆனால் சற்று வித்தியாசமாக. பகைநாடு பற்றிய தகவல்களை அள்ளித்தரும் இந்த சேட்டலைட்களை நொறுக்குதல்.
சீனா, ரஷ்யாவின் கருத்துப் படி ஆத்திர அவசரமேயில்லாமல் விண்வெளியில் சும்மா ஒடிக்கொண்டிருந்த ஒரு செயற்கைகோளை ஏவுகணை(SM-3) வைத்து சுட்டு அமெரிக்கா ஒரு வெற்றிகரமான ஸ்டார்வார் (Starwar) ஒத்திகை பார்த்துள்ளதாம்.
இதையே தான் சீனாவும் (KillSat) முன்பு ஒருமுறை சாதித்துள்ளது.
ஆக இன்னொரு யுத்தம் வந்தால் முதல் இலக்கு வானமாய் தான் இருக்குமோ...?
சிறு வயதில் படித்த சிறுவர் பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது.
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூரல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"
மனசு ஏனோ இலகுவாகி சில்லுனு இருக்குது.
வேதாளம் "மந்திரக்கள்ளி மாயம்" தமிழ் சிறுவர் படக்கதை இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Veethaalam Phantom Mandhirak Kalli Maayam Tamil Children Comics pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF


பக்கத்திலோடும் 279 KB அளவேயான gif படக்கோப்பு என்னமாய் நீளக் கதை சொல்லுகிறதென பாருங்கள். மிக அருமையல்லவா?. சரி.விசயத்துக்கு வருவோம்.

100 மெக் (100MB) அளவிலான வீடியோ கோப்பு ஒன்றை நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் வழி அனுப்ப விழைகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் அது சாத்தியமாகாது. ஏனெனில் இப்போதைக்கு சத்தியமாய் அக்கோப்பின் அளவு மிகப்பெரிது. ஜிமெயில் போன்ற இலவச மின்னஞ்சல் கொடுப்போர் கூடிப்போனால் 20 மெக் (20MB) அளவிலான கோப்புகளை மின்னஞ்சல் வழி அனுப்ப அனுமதிப்பர். அதற்கும் மேல் போனால் அழகாய் "சாரி" சொல்லிவிடுவர்.
நாமெல்லாரும் இருப்போம், கட்டிடங்களெல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பால் நாம் சென்றிருப்போம். என்ன? கால எந்திரம் பற்றி எதாவது கூறுகிறேனென நினைத்தீர்களா? இல்லை நான் இங்கு சொல்ல வருவது ஈ-பாம்(E-bomb) அதாவது மின்காந்த வெடிகுண்டு (Electromagnetic Bomb) பற்றி.
நாலும் தெரிந்திருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இதில் அந்த நான்கும், நான்கு வேதங்களை குறிக்கின்றதா அல்லது நான்கு திசைகளை குறிக்கின்றதாவென தெரியவில்லை. ஆனாலும் நாலு திசைகளிலும் நடப்பனவற்றை நாளும் நாம் அறிந்து வைத்தல் நம்மெல்லாருக்கும் பயனாயிருக்கும்.News-ன் விரிவாக்கம் North East West South ஆக இருக்க இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
தற்போதைய உங்கள் வின்டோஸ் கணிணியின் Product Key என்னவென கண்டுகொள்ளவும், தேவைப்பட்டால் அக்கீயை மாற்றவும் ஒரு இலவச மென் பொருளை நண்பர் தமிழ் நெஞ்சம் அவர்கள் தனது பின்னூட்டம் வழி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.அதன் பெயர் Magical Jelly Bean Keyfinder என்பதாகும். இதனை கீழ்க் கண்ட சுட்டியை சொடுக்கி இறக்கம் செய்து கொள்ளலாம்.
புதிய நூற்றாண்டை ஆரம்பிக்கும் உற்சாகத்தில் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்க இரு வல்லரசுகளுக்கு மட்டும் நெஞ்சம் பக் பக்கென்று கொண்டிருந்தனவாம். Y2K என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் பழுது தவறுதலாய் ஒரு அணுஆயுதப்போரையே தொடக்கிவிடக்கூடாதேவென அவர்களுக்கு அச்சம். அதாவது அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளெல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன.ஏதாவதொரு மனிதனுக்கோ அல்லது கணிணிக்கோ பயித்தியம் பிடித்து விட்டால் கோடிக்கணக்காணோரின் உயிர் பொசுங்கிப்போகும் அபாயத்தில் இன்றைய உலகம். ஆண்டு 2000-மும் பிறந்தது. உச்ச டென்சனிலிருந்த அந்த பட்டாளத்தார்களுக்கு நிம்மதி பெருமூச்சும் வந்தது.
"சீக்கு பிடித்த கோழி மாதிரி" என்ற வாக்கியத்தில் வரும் சீக்கு எனும் வார்த்தை Sick எனப்படும் ஆங்கில 



