புதிதாய் ஒரு ஆண்டி வைரஸ் ஸ்கானெரை யாரோ உங்களுக்கு அறிமுகப்படுத்தியதால் அதை இப்போதுதான் உங்கள் கணிணியில் நிறுவியிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம் அல்லது ஏதோ ஒரு ஆன்டி வைரஸ் ஸ்கேனர் ஏற்கனவே உங்கள் கணிணியில் ஓடிக்கொண்டிருக்கிறதென வைத்துக் கொள்வோம்.
இந்த வைரஸ் ஸ்கேனர்கள் நெஜமாலுமே உருப்படியாய் வேலை செய்கின்றனவாவென எப்படி சோதித்து பார்ப்பது?.
அதற்காக எங்காவது இலவசமாய் வைரஸ்கள் இறக்கத்துக்கு கிடைக்குதாவென்று தேடவாவேண்டும்? இல்லை.இல்லவே இல்லை.
இங்கே இருக்கின்றது அதற்கொரு தீர்வு.ஆமாம் நீங்களே ஒரு சாம்பிள் வைரசை படைத்து உங்கள் கணிணியில் இட்டு உங்கள் ஆன்டி வைரசு ஸ்கானர் நன்றாக வேலை செய்கின்றதாவென ஒரு "பிட்மஸ்" சோதனை செய்து அறியலாம்.
நீங்கள் செய்ய வேண்டியதென்ன? கீழ்க்கண்ட "சுத்தமா நமக்கு ஒன்றுமே புரியாத" எழுத்துவரிசையை நோட்பேடால் புதிதாய் ஒரு டெக்ஸ்ட் கோப்பை திறந்து அதில் சேமியுங்கள்.அவ்ளோ தான்.
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
உங்கள் ஆன்டி வைரசு ஸ்கானர் "ரியல்டைம்" ஸ்கேனிங்கில் வல்லதுவெனில் உடனே இக்கோப்பை கண்டறிந்து உங்களை உசார்படுத்துவதோடு அதை அழித்தும்விடும். இன்னபிற ஸ்கானர்கள் கொஞ்ச நேரம் கழித்து ஸ்கான்பண்ணி வரும்வழியில் இக்கோப்பை கண்டால் "வைரசு இருக்கு டோய்"-னு அலறிவிடும்.
உண்மையில் இந்த Code வைரசோ அல்லது வேறெந்த பயப்படும் படியான விஷயமோ இல்லை.இந்த மாதிரி ஆண்டிவைரஸ் ஸ்கானர்களின் செயல்பாட்டை ஊர்ஜிதம் செய்ய அனைத்து ஆன்டிவைரசு ஸ்கானர் தயாரிப்பாளர்களும் இதை வைரசு போல பாவிக்க தங்களிடையே உடன்பாடு செய்திருக்கின்றார்களாம். மற்றபடி நான் ஒன்றும் ஹாக்கர் இல்லீங்கோ.
இந்த சாம்பிள் வைரசை கீழ்கண்ட சுட்டியிலிருந்தும் இறக்கம் செய்து கொள்ளலாம்.Try at your own risk.
http://www.eicar.org/anti_virus_test_file.htm
My 2 cents..thats all.
:)
அனார் "ஓவியம் வரையாத தூரிகை" தமிழில் கவிதை தொகுப்பு மென்புத்தகம் Anar Oviyam Varaiyadha Thoorigai Tamil kavithai thokuppu e-book Download. Right click and Save.Download
Download this post as PDF


இந்தியா தவிர இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் நாட்டு கரன்சிகளிலும் தமிழ் எழுத்துக்கள் இருக்கின்றனவாம்.





மனிதமென்றாலே அது கடவுளும் சாத்தானும் சேர்ந்த கலவை தானே.அதனால் தானோ என்னவோ தனது "டிஸ்கவரி ஆப் இந்தியா" புத்தகத்தில் நேரு இப்படியாகச் சொன்னார். "இயற்கையின் வலிமையான விளையாட்டுக் கருவியாகவும், இந்தப் பெரிய அண்டங்களில் ஒரு பூமி உருண்டையில் ஒரு தூசை விட அணுவை விட சிறியவனாக இருந்த போதிலும் மனிதன் இயற்கையின் வலிய ஆற்றலை வெற்றிக் கொண்டு அறிவினால் புரட்சிகளினால் அவற்றை அடிமைப்படுத்தினான். அங்கங்கே கடவுள்கள் இருந்தாலும்- இருப்பதாக வைத்துக் கொண்டாலும், மனிதனுக்குள் கடவுளைப்போல ஒன்று இருக்கின்றது. அவனுக்குள்ளே ஒருவகைச் சாத்தானும் இருக்கின்றது" எவ்வளவு சரியான வார்த்தைகள் அவை..jpg)
இணையம் இந்த சமூகத்தில் செய்த இன்னொரு மாயாஜாலம் எங்கோ ஏதோ ஒரு மூலையில் கிடந்த ஒரு சாதாரண கலைஞனையும் ஊர் தெரிய சந்திக்கு கொண்டு வந்தது தாம்.ஏற்கனவே புகழ் பெற்று உச்சியிலிருப்போர் காப்பிரைட் பற்றி கவலைப்பட சாதாரண கலைஞனுக்கு காப்பிரைட் பெரிதாய் படவில்லை. அடையவேண்டும் என் கைங் காரியங்கள் உலகமுழுக்க அடைய வேண்டுமென ஆசைபட்டான்.
என்னிடம் அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று "எப்படி சார் மைக்ரோசாப்ட் Word டாக்குமென்டில் தமிழில் எழுதறது? தமிழில் எழுதினாலோ அல்லது வேறெங்காவதிருந்து காப்பி பேஸ்ட் பண்ணிணாலோ ஒரு மாதிரி எழுத்துக்கள் கட்டம் கட்டமாய் வருகின்றதே.இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என்பதாகும்."

நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் மட்டும் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். ஒரேயடியாய் 750 மைல்கள் தொலைவிலுள்ள மிச்சிகனில் கடாசிவிட்டார்கள். 12 மணிநேர சாலை பயணம். பெரிதாய் களைப்பு ஒன்றும் இல்லை.வந்து சேர்ந்தாயிற்று.
ஹாயாக இணையத்தை ஒரு சுற்று மேய்ந்து விட்டு, சில பல தெரிந்த தெரியாத மென்பொருள்களை விளையாட்டாக இறக்கம் செய்து இயக்கிவிட்டு தூங்கிப்போனீர்கள். திடீரென விழித்து பார்த்தால் உங்கள் கணிணி ஹார்ட்டிரைவ் லைட் மின்னி மின்னி பிஸியாக இருக்கின்றது.மோடம் லைட்டுகள் பலவாறாக மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஏதோ மர்மம் அங்கு நடப்பது போல் காட்டுகின்றது. நீங்கள் நினைப்பது போல் இது ஒரு சாதாரண விசயமில்லை. உங்கள் கணிணியில் என்னமோ அசாதாரணம் நடப்பதையே இது காட்டுகின்றது.உசாராக வேண்டிய தருணம் இது.Trojan Horse அல்லது மால்வேர் எனப்படும் மர்மமென்பொருள்கள் உங்கள் கணிணியிலிருந்து கொண்டே உங்களை பற்றிய தகவல்களை யாருக்கோ வழங்கி உங்கள் காலை வாரிக்கொண்டிருக்கலாம். எனவே இணைய இணைப்பை உடனே துண்டித்து நீங்கள் உங்கள் கணிணியை வைரஸ் ஸ்கேன் செய்தாக வேண்டும்.
"எப்பாவூ! என்ன நகநட்டா வாங்கப் போற,இப்ப வாங்காத, பொங்கலு கழிஞ்சு வாங்கு.கூடுன வெல அப்ப கொறஞ்சு வரும்.இந்த கெழடு அனுபவஸ்தி சொல்றேன் கேளூ"-ன்னு அந்த வயதான பாட்டி அப்போது சொன்னது ஒன்றும் தப்பாய் தெரியவில்லை. அவளை பொறுத்தவரை அவள் காலத்திலெல்லாம் அப்படிதான் இருந்து வந்திருக்கின்றது. பொங்கல் தீபாவளி வந்தால் கல்யாணகாலங்கள் வந்தால் சில சரக்குகளின் விலை கூடுவதும் அப்புறம் குறைவதும் நடந்து வந்திருக்கின்றது.
இங்கே பக்கத்தில் நீங்கள் படங்களில் காணும் அபார அனிமேசன் அசைவுகள் GIF கோப்புகளுக்கேயுரியன.
வாய்க்காகவும் வயிற்றுக்காகவும் செய்யப்படும் அன்றாட வேலைகளுக்கும் அப்பாற்பட்டு நாம் ஒவ்வொருவருக்கும் மனதை நிறைவுபடுத்தும் ஒரு பொழுது போக்கு கண்டிப்பாய் இருக்கவேண்டும் என ஒரு பெரியவர் ஒருமுறை சொன்னது நெஞ்சில் அப்படியே ஆணி அடித்தாற் போல் பதிந்து போனது.அவர் அதற்கு சொன்ன காரணம் தினசரி சிக்கல்களிலிருந்து மனது சிறிது திரும்பி இலகுவாய் இருக்கவும், ஓய்வூர்தியம் வாங்கும் காலத்திலும் நொடிந்து உட்காரவிடாமல் சுறுசுறுப்பாய் வைத்திருக்கவும் அது உதவும் என்றார்.
அடப்பாவமே! இந்த நவீன மின்னணு உலகில் எத்தனை கடவுசொல்கள் தான் நினைவில் வைத்திருப்பதோ? வங்கி ஏடிஎம் போனால் அங்கு ஒரு கடவு சொல்.ஆன்லைன் பாங்கிங்கில் நுழைந்தால் அங்கு ஒரு கடவு சொல். கிரெடிட்கார்டு கணக்குக்குள் நுழைய இன்னொன்று.ஜிமெயில் பார்க்க இன்னொன்று.அப்பப்போ கவுந்து வயிற்றை கலக்கும் பங்கு சந்தையில் பரிமாற்றம் செய்ய இன்னொரு பாஸ்வேர்ட். 
கத்துக்குட்டி நண்பர் ஒருவருக்கு முக்கிய மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தேன்.அந்த மின்னஞ்சல் கிடைக்கவேயில்லை-னு அய்யா புரூடா விட்டார்.ஆனால் அவர் அந்த மின்னஞ்சலை படித்தார் என்பதற்கு என்னிடம் சரியான ஆதாரம் உள்ளது.எப்படி?
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தனது கடைசிநாட்களில் இப்படிச் சொன்னதாய்ச் சொல்வார்கள். கண் கலங்கி தன்னை பார்க்க வருபவர்களை பார்த்து "எல்லாத்துக்கும் கண்டிப்பா ஒரு முடிவு வந்து தானே ஆகனும். முடிவே இல்லாத ஒரு கிரிக்கெட் ஆட்டம் சுவாரஸ்யமாய் இருக்குமா என்ன?"ன்னு சொல்லி சிரிப்பாராம். எவ்வளவு சரியாய்ச் சொன்னார் பாருங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்துவிடுகின்றதே.சாமானியர்களுக்கும் சரி, சாம்ராஜ்யங்களுக்கும் சரி.



