இந்த வருட தொடக்கத்தில் சிப் பயில்வான் இன்டெல் கார் (Intel) பெண்டியத்தின் அடுத்த வடிவத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த வருட முடிவுக்குள் Penryn எனும் புதுவகையான மைக்ரோ புராசசர்கள் மார்க்கெட்டில் புழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1993-ல் மாபெரும் எதிர்பார்ப்போடு Pentium சந்தையில் வந்து ஒரு கலக்கு கலக்கியது.
இதை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய வினோத் தாம் (Vinod Dham -"The father of the Intel Pentium processor") இண்டல் பெண்டியம் புராசசரின் தந்தை என அறியப்பட்டார்.இவர் பூனாவில் பிறந்து டெல்லியில் படித்து பின் அமெரிக்கா பறந்தவர்.இண்டல் நிறுவனத்தின் VP பதவிவரை ஏறி பின் வெளியேறியவர்.
விஷயத்துக்கு வருவோம்,இந்த பென்ரின் புராசசர்கள் 45 nanometre technology கொண்டவையாய் இருக்குமாம்.அதாவது இன்றையவை 65 nanometre technology கொண்டவை.இதனால் சிப் அளவு மிகச் சிறிதாவதோடு அதிலிருக்கும் டிரான்சிஸ்டர்கள் எண்ணிக்கை இன்றை போல் பலமடங்காய் அதிகரிக்குமாம்.அதேநேரம் குறைந்த அளவே மின்சாரம் அது பயன்படுத்துமாம்.எதோ ஒருவகையில் Moore's Law நிரூபிக்கப்பட்டுகொண்டே வருகின்றது.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, April 19, 2007
பெண்டியம் போய் பென்ரின் வருகுது
Posted by
PKP
at
4/19/2007 02:45:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment