அபூர்வமாக கிளிக்கப்பட்ட இந்த படம் ஏதோ ஆழமாக பலவற்றையும் சொல்லும். ஸ்டீவ் தனது இறுதி மேடை பேச்சான WWDC 2011 Keynote மேடை பேச்சை முடித்து கீழே இறங்கியதும் போய் முதல் வேலையாக தனது மனைவின் தோளின் மேல் தலையை சாய்க்கின்றார். பொதுவாகவே ஆப்பிளை பொறுத்தவரை இது போன்ற மீட்டிங்குகளில் ஸ்டீவ்வின் வருகை மிக மிக முக்கியமானது.அவர் இல்லாவிட்டால் தலை இல்லாது தவிக்கும் உடம்பு போலாகிவிடும். கடந்த ஐபோன் 4S அறிமுகவிழாவும் ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது. மனிதர் அந்த தனது கடைசி கீநோட் பேச்சை முடித்து இறங்கியதும் ஏற்கனவே கேன்சரினால் இளைத்துப்போன உடம்பின் களைப்பினால் தலையை சாய்த்தாரா அல்லது இதுதான் தனது கடைசி மேடை பேச்சு என்று தனது உள்ளுணர்வு சொன்னதால் அப்படி செய்தாரா யாரும் அறியோம்.அது ஒரு அற்புதமான தருணம்.அவர் மனதில் எண்ணங்கள் உருகிப்போயிருந்த நேரம். எதிர்காலத்தை கணித்து அதற்கேற்ப படைப்புகளை உருவாக்கிய அவருக்கு தன் எதிர்காலமும் தெரியாமலா போயிருக்கும். எத்தனையோ பேரின் விருப்பங்களை படைப்புகளாக்கி காட்டிய பல அடிச்சுவடுகளை விட்டுச்சென்ற அந்த நல்மனிதரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
தேங்யூ ஸ்டீவ்!!

உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, October 06, 2011
தேங்யூ ஸ்டீவ்!!
Posted by
PKP
at
10/06/2011 12:13:00 PM
11
comments
Labels: Apple, Business, Corporates
Thursday, September 01, 2011
பிடித்து போடு போடு.
முன்பு ஒரு முறை கணிணி ஹேக்கிங் அடிப்படைகளை பற்றி நாம் இந்த வலைத் தளத்தில் எழுதிய போது ஏன் இதையெல்லாம் எழுதி ஜனங்களை கெடுக்கின்றீர்கள் என்கிற ரீதியில் ஒருவர் கோபமாய் பின்னூட்டமிட்டு போயிருந்தார்.களவும் கற்று மற என்பது நம் ஊர் வாக்கு.திருடர்களின் தந்திரங்களை அறியாத போலீசாரால் என்ன பயன். போனால் போகட்டும் மக்களுக்கு பிடிக்கவில்லை ரூட்டை மாத்து என்றானது.
இன்றைக்கு இந்த ஹேக்கிங்குகளின் போக்கே மாறியிருக்கின்றது. திருட்டுத்தனமாய் இல்லாமல் நல்ல முறையில் ஹேக்கிங் செய்பவர்களை ஒயிட் ஹேட்ஸ் (White Hats) என்பார்கள்.இத்தகையோருக்கு இன்றைக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்ப்பு. பேப்பர் பேப்பராக வேலை தேட வேண்டியதில்லை, பயோடேட்டாவெல்லாமல் எழுத வேண்டியதில்லை, பேஸ் டு பேஸ் இண்டர்வியூவெல்லாம் செல்லாமல் கூகிள்,ஆப்பிள் போன்ற பிரதான கம்பெனிகள் வேலை கொடுக்கின்றன ஹேக்கர்களுக்கு. ஆஸ்திரியாவை சேர்ந்த வலைப்பதிவர் பிளோரியன்.புதிதாக வந்துள்ள கூகிள் ப்ளசின் இண்டு இடுக்குகளில் நுழைந்து மோப்பமிட்டு கூகிள் ரகசியமாக டெவலப் செய்து கொண்டிருந்த பல புது கூகிள் பிளசின் வசதிகளை முன்கூட்டியே உலகுக்கு தனது வலைப்பதிவுகள் வழி அறிவித்துவிட கூகிளுக்கு பொத்துக்கொண்டு வந்தது டென்சனும் ஆச்சரியமும். கூகிளுக்கு தெரிந்த ஒரே ஈசி சொலூசன். இத்தனை புத்திசாலியை விட்டு வைக்கக்கூடாதுவென தன் நிறுவனத்தில் அவரை சேர்த்துக்கொண்டது.
இதே மாதிரி இன்னொரு கதை.பத்தொன்பதே வயதான நிக்கோலஸ் என்பவர் ஆப்பிள் ஐபோன்களை ஜெயில் பிரேக் பண்ணுவதில் படு கில்லாடி. www.jailbreakme.com-னு இதற்கென தனியாக ஒரு வலைத்தளமே வைத்திருக்கின்றார். பார்த்தது ஆப்பிள். தொல்லை தாங்க முடியாமல் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பி இருக்கின்றது. இப்படி இந்த மாதிரியான கதைகள் தொடர்கின்றது.
என் இனிய தமிழ் மாணவர்களே! ஹேக்கிங்கில் ஆர்வமா,இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. பேஸ்புக் இணையதளம் ”Security Bug Bounty” எனும் திட்டத்தை அறிவித்திருக்கின்றது. அதன் படி பேஸ்புக் வெப்சைட்டின் புரோகிராம் கோடில் நீங்கள் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்து அறிவித்தால் $500 முதல் இன்னும் அதிகமான டாலர்கள் வரை சன்மானம் நீங்கள் கொடுக்கும் தகவலை பொறுத்து கொடுப்பதாக அறிவித்திருக்கின்றார்கள்.இதுவரை இந்த மாதிரி பக் ரிப்போர்ட் கொடுத்துள்ளவர்கள் லிஸ்டில் பல இந்திய பெயர்கள் இருக்கும் என நினைத்து ஓடிப்போய் பார்த்தால் இரண்டே இந்திய பெயர்கள் தான் தெரிந்தது.”நம் ஊர் காரர்களுக்கு சம்பளத்துக்கு தான் புரோகிராம் பண்ணத் தெரியும், ஹேக்கிங்குக்கு சீனர்களைத்தான் பிடிக்கனும்” என்று கோபப்பட்டான் கோபால். அதனால் என்ன பேஸ்புக்குக்கு போட்டியாக வந்து சக்கை போடு போடும் கூகிள் பிளஸ் புராஜெக்டின் லீடரே ஒரு இந்தியர் தான் என நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். பெயர் Vic Gundotra.
On the Lighter Side

Posted by
PKP
at
9/01/2011 11:57:00 AM
10
comments