முன்பு ஒரு முறை கணிணி ஹேக்கிங் அடிப்படைகளை பற்றி நாம் இந்த வலைத் தளத்தில் எழுதிய போது ஏன் இதையெல்லாம் எழுதி ஜனங்களை கெடுக்கின்றீர்கள் என்கிற ரீதியில் ஒருவர் கோபமாய் பின்னூட்டமிட்டு போயிருந்தார்.களவும் கற்று மற என்பது நம் ஊர் வாக்கு.திருடர்களின் தந்திரங்களை அறியாத போலீசாரால் என்ன பயன். போனால் போகட்டும் மக்களுக்கு பிடிக்கவில்லை ரூட்டை மாத்து என்றானது.
இன்றைக்கு இந்த ஹேக்கிங்குகளின் போக்கே மாறியிருக்கின்றது. திருட்டுத்தனமாய் இல்லாமல் நல்ல முறையில் ஹேக்கிங் செய்பவர்களை ஒயிட் ஹேட்ஸ் (White Hats) என்பார்கள்.இத்தகையோருக்கு இன்றைக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்ப்பு. பேப்பர் பேப்பராக வேலை தேட வேண்டியதில்லை, பயோடேட்டாவெல்லாமல் எழுத வேண்டியதில்லை, பேஸ் டு பேஸ் இண்டர்வியூவெல்லாம் செல்லாமல் கூகிள்,ஆப்பிள் போன்ற பிரதான கம்பெனிகள் வேலை கொடுக்கின்றன ஹேக்கர்களுக்கு. ஆஸ்திரியாவை சேர்ந்த வலைப்பதிவர் பிளோரியன்.புதிதாக வந்துள்ள கூகிள் ப்ளசின் இண்டு இடுக்குகளில் நுழைந்து மோப்பமிட்டு கூகிள் ரகசியமாக டெவலப் செய்து கொண்டிருந்த பல புது கூகிள் பிளசின் வசதிகளை முன்கூட்டியே உலகுக்கு தனது வலைப்பதிவுகள் வழி அறிவித்துவிட கூகிளுக்கு பொத்துக்கொண்டு வந்தது டென்சனும் ஆச்சரியமும். கூகிளுக்கு தெரிந்த ஒரே ஈசி சொலூசன். இத்தனை புத்திசாலியை விட்டு வைக்கக்கூடாதுவென தன் நிறுவனத்தில் அவரை சேர்த்துக்கொண்டது.
இதே மாதிரி இன்னொரு கதை.பத்தொன்பதே வயதான நிக்கோலஸ் என்பவர் ஆப்பிள் ஐபோன்களை ஜெயில் பிரேக் பண்ணுவதில் படு கில்லாடி. www.jailbreakme.com-னு இதற்கென தனியாக ஒரு வலைத்தளமே வைத்திருக்கின்றார். பார்த்தது ஆப்பிள். தொல்லை தாங்க முடியாமல் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பி இருக்கின்றது. இப்படி இந்த மாதிரியான கதைகள் தொடர்கின்றது.
என் இனிய தமிழ் மாணவர்களே! ஹேக்கிங்கில் ஆர்வமா,இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. பேஸ்புக் இணையதளம் ”Security Bug Bounty” எனும் திட்டத்தை அறிவித்திருக்கின்றது. அதன் படி பேஸ்புக் வெப்சைட்டின் புரோகிராம் கோடில் நீங்கள் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்து அறிவித்தால் $500 முதல் இன்னும் அதிகமான டாலர்கள் வரை சன்மானம் நீங்கள் கொடுக்கும் தகவலை பொறுத்து கொடுப்பதாக அறிவித்திருக்கின்றார்கள்.இதுவரை இந்த மாதிரி பக் ரிப்போர்ட் கொடுத்துள்ளவர்கள் லிஸ்டில் பல இந்திய பெயர்கள் இருக்கும் என நினைத்து ஓடிப்போய் பார்த்தால் இரண்டே இந்திய பெயர்கள் தான் தெரிந்தது.”நம் ஊர் காரர்களுக்கு சம்பளத்துக்கு தான் புரோகிராம் பண்ணத் தெரியும், ஹேக்கிங்குக்கு சீனர்களைத்தான் பிடிக்கனும்” என்று கோபப்பட்டான் கோபால். அதனால் என்ன பேஸ்புக்குக்கு போட்டியாக வந்து சக்கை போடு போடும் கூகிள் பிளஸ் புராஜெக்டின் லீடரே ஒரு இந்தியர் தான் என நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். பெயர் Vic Gundotra.
On the Lighter Side

உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, September 01, 2011
பிடித்து போடு போடு.
Posted by
PKP
at
9/01/2011 11:57:00 AM
10
comments
Tuesday, January 06, 2009
ஓட்டத் தடா
இன்னொரு ஆண்டும் தொடங்கி அது யாரோ தன்னை துரத்தும் வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றது. உள்ளே என்ன பரிசுப்பொருள் இருக்கின்றதோ என்று ஒரு பரிசுபொட்டலத்தை திறந்து பார்க்கத் துடிக்கும் ஒரு குழந்தையின் மனநிலையில் இல்லை நாம். அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்று ஒரு திகில் படத்தை பார்க்கும் மனநிலையில் தாம் நாம் இருக்கின்றோம்
ஊருக்குப் போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்திருந்தான் கோபால். போய் ரொம்ப நாளாகிவிட்டதால் ஆர்வமாய் விசாரித்தேன். கால்மணி நேரத்துக்கொருமுறை வீட்டிலிருந்து செல்போன் வருகின்றதாம் பத்திரமாய் இருக்கின்றாயாவென்று. பொல்லூசன் ரொம்பவாகிக்கிட்டே போகுதுடாவென்று சலித்துக்கொண்டான். தூசு மாசு ஒருபக்கமென்றால் வாகன சத்த மாசு இன்னொரு பக்கம்.சாலைகளில் இளசுகள் வீசும் விழி மாசு தான் கொதிக்கும் வெயிலில் ஒரே ஆறுதல் என்றான்.
நம் ஊரில் குடும்பத்துக்கு ஒரு கணிணி என்ற நிலை மாறி ஆளுக்கு ஒரு கணிணி என்ற நிலை வர இன்னும் சில காலம் ஆகலாம். அதுவரைக்கும் நாம் சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்ளவேண்டியுள்ளது. இரத்தக்களறி காட்டும் கம்ப்யூட்டர் வார் கேம்கள், அப்படி என்னத்தான் இருக்கின்றதுவென பார்க்க நிறுவிய ஏடாகூட வயசுவந்தோர் கேம்கள், கணக்கு வழக்குகளையெல்லாம் வைத்திருக்கும் அக்கவுண்டிங் பயன்பாடுகள் இதுபோன்றவற்றையெல்லாம் தவறியும் குழந்தைகளோ அல்லது பிறரோ ஓட்டிவிடாமல் இருக்க பாஸ்வேர்ட் போட்டுவைக்க Game Protector எனும் இலவச மென்பொருள் உதவலாம். அந்த குறிப்பிட்ட கடவுசொல்லை கொடுத்தால் மட்டுமே அந்த கேமோ அல்லது புரோகிராமோ ரன் ஆகும். தெரிந்தோ தெரியாமலோ சிறுசுகளும் குழந்தைகளும் கேம் மட்டுமல்லாமல் பிற குறிப்பிட்ட புரோகிராம்களையும் ஓட்ட விடாமல் தடுக்க இந்த gameprotector நிச்சயம் உதவும்.
Download from here
http://www.gameprotector.com/gameprotector_setup.exe
அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது - ஆப்ரகாம் லிங்கன் |
Posted by
PKP
at
1/06/2009 11:41:00 AM
1
comments
Sunday, November 02, 2008
ஐந்து பென்டிரைவ் பாதுகாப்பு மென்பொருள்கள்
முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் ஃப்ளாப்பி தட்டுகள் வழியே பரவின. பின்பு அவை பரவ கணிணி நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்தன. இப்போதெல்லாம் கணிணி வைரஸ்கள் பெரும்பாலும் ஜம்ப் டிரைவுகள் அல்லது பென்டிரைவுகள் எனப்படும் USB டிரைவுகள் வழியே பரவுகின்றன.அலுவலக வளாகத்தில் இலவசமாக கீழே கண்டெடுத்த USB டிரைவை அப்படியேக் கொண்டு தைரியமாக கணிணியில் செருகக் கூடாது. அதன் Autoplay வசதி உங்கள் கணிணியில் வினையை விதைத்துவிடலாம்.
USB டிரைவுகள் வழியே பரவும் வைரஸ்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இங்கே சில யோசனைகள்:
1.உங்கள் கணிணியில் இலவச USB Firewall ஒன்றை நிறுவிக்கொள்ளலாம். எப்போதெல்லாம் ஒரு பென்டிரைவை உங்கள் கணிணியில் செருகுகின்றீர்களோ அப்போதெல்லாம் அது ஒரு சோதனை செய்து வைரஸ்மாதிரியான கோப்புகள் தென்பட்டால் அது உடனே உங்களை உஷார்படுத்தும்.
USB Firewall Download Link
2.Tweak UI எனும் மைக்ரோசாப்டின் இலவச மென்பொருளை பயன்படுத்தி இது போன்ற removable driveகள் உங்கள் கணிணியில் Autoplay ஆவதை தடுக்கலாம். அதனால் தானே ஏகப்பட்ட பிரச்சனைகள்.
Tweak UI Download Link
3.ClamWin எனப்படும் இலவச Portable ஆன்டிவைரஸ் மென்பொருளை உங்கள் பென்டிரைவில் வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது அவசரத்துக்கு ஸ்கேன் செய்துகொள்ள உதவும்.
ClamWin Download Link
4.உங்கள் கணிணியின் USB டிரைவை அப்பப்போ enable அல்லது disable செய்துகொள்ள USB Drive Disabler எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.
USB Drive Disabler Download Link
5.சில பிரபல ஃப்ளாஷ் டிரைவ் வைரஸ்களை,வார்ம்களை ஒழிக்க Flash Disinfector உங்களுக்கு உதவலாம்.
Flash Disinfector Download Link
புயலில் புன்னைமரங்கள் வீழ்ந்துவிடுகின்றன. |
Posted by
PKP
at
11/02/2008 12:05:00 AM
4
comments
Thursday, September 25, 2008
இந்த செப்டம்பர் 11
அந்த செப்டம்பர் 11-யை விட இந்த செப்டம்பர் 11 அமெரிக்காவை ரொம்பவே அசைத்து போட்டிருக்கின்றது. எதிர்கட்சி முக்கிய புள்ளிகளும் ஆளும்கட்சி முக்கிய புள்ளிகளும் வித்தியாசமில்லாமல் ஒரே அறையில் சுற்றி அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். 700 பில்லியன் டாலர்களை அரசு போடாவிட்டால் சொல்லப்படும் பின்விளைவுகள் அச்சமூட்டுபவையாய் இருக்கின்றன. அப்படியே அந்த டாலர்களை அரசு போட்டாலும் அந்த எல்லா சுமையும் சாதாரணமக்கள் மேல் தான் வரிச்சுமையாய் வந்து விழும். இந்த வருடம் வரி ரிபேட் கொடுத்ததுக்கு வாட்டமாக அடுத்த வருடம் இரண்டுமடங்காய் பிடுங்கப்படலாம். லாபமாய் கம்பனிகள் ஓடும் போது மட்டும் அதில் வரும் லாபம் தனியாருக்குப் போகும். அதுவே நஷ்டத்தில் ஓடினால் அச்சுமையை பொதுமக்கள்மேல் சுமத்துவதாவென கடுப்பில் இருக்கின்றது ஒரு கூட்டம்.
இதற்கிடையே துணைஅதிபருக்கு போட்டியிடும் சாரா பாலின் அம்மையாரின் யாகூ மெயில் ஐடி ஹேக்செய்யபட்டதில் ஐற்றி(IT) துறைகாரர்கள் புதிதாய் பாடம் கற்றிருக்கிறார்கள். அந்த 20 வயது ஹேக்கர் பையன் ரொம்ப ஒன்றும் மெனக்கடவில்லை. பாலின் தனது மின்னஞ்சலாக யாகூ அக்கவுண்டான gov.sarah@yahoo.com பயன்படுத்துகிறார் என தெரிந்ததும் அவன் யாகூமெயிலின் "Forgot Your Password" ஐ கிளிக்கி அது கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிக்க முயன்றிருக்கிறான். அது கேட்கும் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில்களான அவர் பிறந்தநாள், அவர் வசிக்கும் இட Postal zip code போன்றன விக்கிபீடியாவிலும் கூகிளிலும் தேடி எடுத்துக்கொண்டான். “where did you meet your spouse?” என்ற கேள்விக்கு மட்டும் விடையளிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறான. ஆனாலும் அங்கும் இங்கும் கூகிளில் தேடி (நம்மாட்கள் தான் பேட்டிகளில் இதையெல்லாம் ஒப்பித்துவிடுகிறார்களே) கடைசியில் கண்டுபிடித்து விட்டான். பாப்கார்ன் என்று அம்மையாரின் அக்கவுண்ட் பாஸ்வேர்டை ரீசெட் செய்துவிட்டு குளிக்கப்போய்விட்டானாம். பாலினின் சில குடும்ப படங்களும் சில தனிப்பட்ட மெயில்களும் அடுத்தநாள் பொதுஜன காட்சிக்கு வந்தன.நல்லவேளையாய் விவகாரமாய் எதுவும் கிட்டவில்லை. இப்படி யாகூவில் எளிதாய் கடவுசொல் திருடப்பட ஜிமெயிலின் பாதுகாப்பு பரவாயில்லை என்கின்றார்கள்.
விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள் - தாகூர் |
சோசியல் நெட்வொர்க்கிங் பெருத்த இக்காலத்தில் பெரும்பாலானோரின் மேற்சொன்ன தனிப்பட்ட தகவல்கள் மற்றும் "படித்த பள்ளி" "வேலைசெய்த இடங்கள்" "அம்மா பெயர்" ஆகிய தகவல்கள் ஆன்லைன் ப்ரொபைலில் எளிதாய் கிடைக்கின்றது. இதைப்போய் எப்படி Secret question ஆக கருதுவது?
இப்படி பயனர் பற்றிய எளிய "ரகசியகேள்விகளுக்கான" விடைகள் ஆன்லைனிலேயே கிடைப்பதால் இத்தகைய சில்லி கேள்விகளை கேட்பதற்கு பதிலாக இந்த சிஸ்டத்தையே மொத்தமாய் மாற்றவேண்டும் என்கின்றார்கள் ஐற்றி வல்லுனர்கள். ஒரு கேள்விக்கு பதில் பல கேள்விகள் கேட்டால் என்ன? பொதுவாக யாரும் எளிதில் வெளியில் சொல்ல விரும்பாத விருப்பு வெறுப்புகளை உணர்வுகளை ரகசியகேள்விகளாக்கலாமோவென ஆலோசிக்கின்றார்கள். இப்படி பார்க்கப்போனால் ஐற்றி செக்யூரிட்டி இன்னும் ரொம்பதூரம் போகவேண்டியிருக்கின்றது.
Posted by
PKP
at
9/25/2008 11:19:00 PM
4
comments
Labels: Security
Saturday, August 16, 2008
மூன்று வாலட்டுகள்
நமது வலைப்பதிவுக்கு அவ்வப்போது வருகை தரும் நண்பர் வடுவூர் குமார் பெரும்பாலான நமது பதிவுகளில் சும்மாவாச்சும் தனக்கு தோன்றுவதை இரு வரிகளில் பின்னூட்டமாக இட்டுச் செல்வார். அதில் அவருக்கு ஒரு திருப்தியோ என்னவோ? அப்படி இட்டு இட்டு இன்றைக்கு அவர் நமது வலைப்பதிவில் முதல்முறையாக சென்சுரி போட்டுள்ளார். அவருக்கு என் நன்றிகள். நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் இருவேறு ஐடிகளில் பின்னூட்டம் இட்டுச் செல்வதுண்டு. இரண்டையும் சேர்த்தால் நூறையும் தாண்டும். அவருக்கும் என் நன்றிகள்.தன்னம் தனியே பிரயாணிப்பதை விட இது போன்ற சகப்பயணிகளுடன் சேர்ந்து சம்சாரித்துக் கொண்டே பயணித்தல் தூக்ககலக்கத்தை போக்குகின்றது.
"இரண்டு விவரணப்படங்கள்" என்ற எனது முந்தைய பதிவில் இரு டாக்குமென்டரி வீடியோக்களை அறிமுகப்படுத்தியிருந்தேன்.
LAV enkat எழுதியிருந்தார்,Dear Mr.PKP,I am regular reader of your blog and GREAT job done. I like your simple writings so anyone can understand. However today this blog I couldn't understand at all. Can you explain in more detail so everyone understand.Thankx.
நன்றி LAV enkat!! கொஞ்சம் குழப்பிவிட்டேனோ?
Zeitgeist என்ற விவரணப்பட வீடியோவின் மூன்றாம் பாகத்தை நீங்கள் பார்த்திருந்தீர்களானால் நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரிந்திருக்கலாம். நான் அங்கு குறிப்பிட்டுச் சொன்ன "அந்த தொழில் நுட்பம்" நாம் இங்கு ஏற்கனவே பேசிய "RFID" -தான். சீக்கிரத்தில் இந்நுட்பம் சக்கைபோடு போடப்போகின்றது பாருங்கள். இது பற்றிய எனது முந்தைய பதிவு இதோ. "மனிதனுக்குள் ஒரு சிப்" ஒரு நிமிடம் இந்த சுட்டியை சொடுக்கி அப்பதிவை படித்து விட்டு மீண்டும் இப்பதிவை தொடர்தல் நல்லது.
சந்தேகமே இல்லாமல் இது ஒரு scary-யான தொழில் நுட்பம்தான். ஆயிரம் அருமைகள் இருந்தாலும் இதனால் மனிதனின் பிரைவஸி மற்றும் சுதந்திரம் காணாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் திரண்டு வரும் தொழில் நுட்பமுன்னேற்றங்களை யாரால் தடுக்க இயலும்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் நம்மில் பலரும் இந்த Radio-frequency identification எனப்படும் RFID தொழில் நுட்பத்தை ஏற்கனவே தாங்களே அறியாமல் பயன்படுத்தி வருகின்றார்கள். கோபாலிடம் நீயும் பயன்படுத்துகிறாய்டா என்றேன். "வாட்" என்றான். அவன் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு ஒன்று இந்த RFID சிப் நிறுவப்பட்டது. எதிர்கால கடனட்டைகள் இந்தமாதிரி ஒரு சிப்பை உள்ளடக்கியே வருமாம். இந்த சிப் உங்கள் கடனட்டை பற்றிய தகவகள் அனைத்தையும் கொண்டிருக்கும். இதில் ஒரு சிக்கலும் இருக்கின்றது. டன்கின்டோனட்ஸ் வரிசையில் நிற்கும் கோபாலருகே தனது பாக்கெட்டில் RFID scanner வைத்திருக்கும் ஒரு ஹேக்கர் நெருங்கினால் அந்த RFID scanner-ஆல் இவன் கிரெடிட் கார்டு தகவல்களை வயர்வெஸ்ஸாய் படிக்க முடியும்.இந்த அலைவரிசை தொடர்பை தடுக்கத்தான் புதிதாக ஒருவித பர்ஸை சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். அதன் பெயர் RFID Blocking Wallet.என்னமோ அதில் alloy shielding material இருக்கிறதாம். அது அந்த அனாவசிய ஸ்கேனர்கள் படிக்கமுடியாமல் சுவர்போலிருந்து தடுத்துவிடுமாம்.
நீங்கள் படத்தில் காண்பது போல் சிவப்பு வட்டமிட்டது போன்ற குறிகள் உள்ள கடனட்டை பயன்படுத்துவோராயின் அது RFID கொண்டது என தெரிக.
தனது கிரெடிட் கார்டுகளை வரிசையாய் அடுக்கி வைத்துப் பார்த்து "நான் தப்பித்தேன்பா" என்றாள் பரிமளா.
"இல்லை" என்றேன் நான். திகிலுடன் என்னை பார்த்தாள்.
விளக்கினேன்.
"உன்னைப் பார்த்தால் இந்தியப்பெண் போல இருக்கின்றாய், பேச்சுக்கொடுத்தால் அமெரிக்க ஜாடை வீசுகின்றது, வைத்திருக்கும் புத்தகங்களோ ஃப்ரெஞ் தலைப்பிட்டவை, கேட்கும் பாடல்கள் எல்லாம் அரபிக் இதெல்லாம் குழப்புபவைதான். ஆனாலும் RFID scanner வைத்திருக்கும் அந்த ஹேக்கர் உன்னை நெருங்கினால் எளிதாய் அவன் சொல்வான் நீ அமெரிக்க பிரஜை என்று. எப்படி என கேட்கின்றாயா? நீ வைத்திருக்கும் அமெரிக்க பாஸ்போர்டில் RFID இருக்கின்றது" என்றேன்.
நேகாவுக்குமாய் சேர்த்து மூன்று வேலட்கள் ஆர்டர்பண்ணியிருக்கின்றோம். அருணா நந்தினியின் புதினம் "பார்த்த முதல் நாளே" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக.Aruna Nanthini Novel "Paartha Muthal Naalea" in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
8/16/2008 10:10:00 AM
9
comments
Labels: Security
Monday, July 28, 2008
கண் இமைக்கும் நேரத்தில் களவு
கரன்சி நோட்டில் கைபடாமலேயே நம்மால் வாழ முடிகின்றது. என்ன வாரறுதியில் லாண்டரி மெசினில் போட மட்டும் சில குவாட்டர்களை தொடுகின்றோம். மற்றபடி அனைத்து லவ்கீகங்களுக்கும் கிரெடிட்கார்டு தான் பதில்.வங்கிச்சேமிப்பு கணக்குகளில் எண்கள் கொஞ்சம் ஏறினால் இரண்டு மடங்கு இறங்குகின்றன. அந்த எண்களில் தான் நம் நாட்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் உலகில் இருக்கும் அத்தனை டாலர்களையும் காகிதமாக்க அமேசான் காடு கூட பத்தாது.நல்ல வேளையாய் சரியான வேளையில் சரியான தொழில்நுட்பங்கள் மனிதனுக்கு வாய்த்துவிடுகின்றது. பணவீக்கமாயினும் அதை சுமக்காமல் அட்டைவழி பிழைத்துப் போய்க் கொண்டிருக்கின்றான்.
இப்படி கடனட்டை நம் வாழ்க்கையை சிறிது எளிதாக்கியிருக்க அடுத்தமுறை உங்கள் கடனட்டையை பயன்படுத்தும் போது கொஞ்சம் உஷாராயிருங்கள் என்கின்றனர் மும்பை போலீசார். நீங்கள் உங்கள் கடனட்டையை அந்த டைகட்டின ஆசாமியிடம் கொடுத்துவிட்டு அரக்க பரக்க பார்த்துக்கொண்டிருக்க அந்த ஆசாமியோ பில் போடுவதோடு தன்னிடம் மறைத்து வைத்துள்ள தன் சொந்த Portable Magnetic Card Reader-ரிலும் ஒரு தேய்ப்பு தேய்த்து விடுகின்றான்.(படம்) அந்த ரீடர் கணப்பொழுதில் உங்கள் கிரெடிட்கார்டை படித்து அதிலுள்ள தகவல்களை மனப்பாடம் செய்துவைத்துக்கொள்ளும். இந்த ஆசாமி அத்தகவல்களை பின் வீட்டில் போய் தன் கணிணி வழி படித்து, அச்சு அசலாய் உங்கள் கிரெடிட் கார்டு போலவே இன்னொரு போலி கிரெடிட்கார்டை தயாரிக்கலாமாம். சந்தைகளில் பயன்படுத்தலாமாம். கதை எப்படி இருக்கு? இப்படி குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மாட்டிக்கொண்ட ஒரு கணிணி இஞ்சினியர்கள் கும்பல் மும்பையில் சமீபத்தில் பிடிபட்டுள்ளதாக சொல்கின்றார்கள். கண்ணை மூடிக்கொண்ட பூனைபோல ரொம்ப பேரின் நினைப்பு இதுமாதிரி ஹாக்கிங் செய்தால் எளிதாய் தப்பித்திடலாம் மாட்டிக்கொள்ளமாட்டோம் என்பதாகும்.தவறு நண்பரே மிக மிகத் தவறு. சரியான புரிதல்வேண்டும். ஒருவேளை அதற்கு நீங்கள் ரஷ்யா போன்ற இரும்பு தேசத்தில் இருந்தால் சாத்தியமாகலாமாயிருக்கும்.
ஸோ ஷெரேட்டனோ பார்க் இன்னோ,வால்மார்ட்டோ மெக்டானல்சோ உங்கள் கடனட்டையை அடுத்தமுறை கடைக்காரரிடம் தேய்க்க கொடுக்கும் போது அந்த கார்டிலேயே ஒரு கண் இருக்கட்டும். கண் இமைக்கும் நேரத்தில் நீங்கள் களவாடப்படலாம்.ஜாக்கிரதை.
தகவலுக்கு நன்றி:M.Rishan Shareef ஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரம் அல்லது ஸ்ரீ சீர்டி ஸாயிபாபாவின் அற்புத வாழ்க்கையும் உபதேசங்களும் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Shri Shirdi Sai Baba life history in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
7/28/2008 10:28:00 PM
3
comments
Labels: Security
Sunday, July 06, 2008
ரேப்பிட் வைரஸ்கள்
விண்டோஸ் எக்ஸ்பியில் அடிப்படையிலேயே பயர்வால் ஒன்று ஓடிக்கொண்டே உள்ளதால் இப்போதெல்லாம் வைரஸ்கள் தானாக வந்து உங்கள் கணிணியை தாக்குவது அபூர்வமே.மாறாக நாமாகப் போய் வலிய வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டால் தான் உண்டு.ஏடாகூடாமான தளம் எதற்காவது போய் அங்கு தோன்றும் ஒரு பாப் அப் விண்டோவில் "Yes" சொல்லி வைரஸை விலைக்கு வாங்கும் ரகம் பாமர கணிணி பயனர்கள் ரகம் எனில் தேடிப்போய் ஒரு குறிப்பிட்ட ".exe" கோப்பை ரேப்பிட்ஷேரிலிருந்தோ அல்லது இது போன்ற இன்ன பிற கோப்புகிடங்குகளிலிருந்தோ இறக்கம் செய்து அது வழி வைரசை தங்கள் கணிணிக்கு இறக்குமதி செய்யும் ரகம் கீக் (Geek) கணிணி பயனர்கள் ரகம்.
எதாவது ஒரு பயன்பாடு வேண்டுமெனில் உடனே அதற்காக பட்டென ஏதாவது ஒரு ரேப்பிட்சேர் சுட்டியிலிருந்து அதை இறக்கம் செய்வது அத்தனை பாதுகாப்பானதல்ல. முடிந்த வரைக்கும் நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே "எக்சிகியூட்டபிள்"-களை இறக்கம் செய்வது நல்லது. அல்லது இறக்கம் செய்ததும் நன்றாக ஸ்கேன் செய்ய ஒரு நல்ல வைரஸ் ஸ்கேனராவது உருப்படியாய் வைத்திருத்தல் வேண்டும்.
MP3 கோப்புகள், வீடியோ கோப்புகள், PDF கோப்புகள் ,சில சமயம் CBTகள் இது தவிர பிற வகை கோப்புகளை முக்கியமாய் exe கோப்புகளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் ஓட விடுதல் அத்தனை பாதுகாப்பான பழக்கம் அல்லவே. எவர் என்ன நோக்கில் அந்த மென்பொருளை அங்கு சேமித்து வைத்துள்ளாரோ? அதனுள் ஏதாவது வைரசோ அல்லது பிற மர்ம ட்ரோஜன்களோ ஒளிந்திருந்தால் அது நமக்கு சுத்தமாய் தெரிவதில்லை. நம்மில் பலரும் வைரசில் மாட்டிவிடல் இப்படித் தான்.
அது இப்படி இருக்க, இங்கே ஒரு டிப்.
ரேப்பிட்சேரில் 100MB-க்கும் பெரிதான கோப்புகளை சேமிக்க முடியாததாகையால் டிவிடிக்களை நூறு நூறு Meg-காக பல .rar துண்டுகளாக்கி ஒரு குழுவாக இணைஏற்றம் செய்து வைத்திருப்பார்கள். பத்து .rar கோப்புகளில் ஒன்பதை பல மணிநேரமாய் இறக்கம் செய்த பின் 10வது இறக்கமாக மறுக்கும். அனைத்தையும் இறக்கம் செய்யாமல் Winrar-ம் அவ்வீடியோவை Extract செய்யவிடாது. ஒரே டென்சனாகிப் போகும். குறைந்தது இறக்கம் செய்துள்ள அந்த ஒன்பது .rar கோப்புகளில் உள்ள வீடியோவையாவது பார்க்க வழியுள்ளதா?
ஆம் உள்ளது.
அந்த .rar கோப்புக் குழுவை விரிவாக்கம் செய்யும் முன் மறக்காமல் "Keep broken files" -ஐ Winrar-ல் டிக் செய்துகொள்ளுங்கள்.(படம்)
பத்தாவதை பார்க்க இயலாவிட்டாலும் மற்ற ஒன்பதையாவது பார்க்கலாம்.பாமாவின் கருக்கு மற்றும் சங்கதி ஆகிய இரு நூல்களின் தொகுப்பு "தழும்புகள் காயங்களாகி" நூல் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Baama Karukku Sangathi Books as Thalumbugal Kayangalaagi in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
7/06/2008 08:43:00 PM
2
comments
Thursday, July 03, 2008
ஆயிரத்தோராவது பிரச்சனை
பிரபலங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகளில் இது ஆயிரத்தோராவது பிரச்சனை. நிம்மதியாக எங்கும் போக முடிவதில்லை. எப்போதும் யாரோ தன்னை கேமராவில் கண்காணித்துக் கொண்டிருப்பது போன்றே தோன்றும் துபாய் போனால் ஒழுங்காக தூங்க முடிவதில்லை, தென் ஆப்ரிக்கா போனால் கூட அட சுதந்திரமாக அங்கு குளிக்க முடிவதில்லை, மும்பை போய் ஒரு துணிமணி எடுக்கலாமெனில் ஷாப்பிங் மால்களின் டிரஸ்ஸிங் ரூம்களுக்குள் போகவே பயமாயிருக்கிறது.Pinhole அதாவது குண்டூசி அளவேயான மறைந்திருக்கும் கேமராக்கள் உங்களை படம்பிடித்துக் கொண்டிருக்கலாம்.படுக்கை அறையில் சாதாரண கடிகாரம் தானே இருக்கின்றது என அந்த பிரபலம் நினைக்க ஆனால் அதற்குள் தான் அந்த மர்ம காமரா ஒளிந்திருக்கும்.மேஜையில் புசு புசுவென இருக்கும் டெட்டிபியர் கரடி பொம்மையை எடுத்து கொஞ்சலாம் போல் தோன்றும் ஆனால் அதற்குள்ளே தானே அவருக்கு ஒளிந்திருக்கு ஆப்பு (காமெரா).ஏன் ஜேம்ஸ்பாண்ட் கணக்காலும் சாதாரண சட்டைபொத்தான் வடிவில் கூட ஹிடன் கேமராக்கள் இப்போது வந்துள்ளன.
இவற்றிலிருந்து தப்ப வழி இருக்கின்றதா?
அந்த காலத்தில் இராணுவ அல்லது அரசின் பிரத்தியேக உபயோகத்துக்கென இருந்த பல ரகசிய தொழில் நுட்பங்கள் இன்று சாதாரண குடிமகன்கள் கைக்கு எட்டும் அளவுக்கு வந்துவிட்டன. உதாரணமாய் GPS-ஐ சொல்லலாம்.சில வருடங்களுக்கு முன்பு வரை மிலிட்டரி பயன்பாடுகளுக்கு மட்டுமே அது பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது கோபால் கூட ஒன்றுக்கு இரண்டு வைத்திருக்கின்றான்.இன்றைய அளவில் இராணுவ அல்லது அரசின் பிரத்தியேக உபயோகத்துக்கென இருக்கும் ரகசிய தொழில் நுட்பங்கள் என்னென்னவோ யாருக்குத் தெரியும். தெரிய வந்தால் நமக்கு அநாவசியமாய் திகில் தான் பிடிக்கும்.
பெரும்பாலும் 2020-யில் அது வெளி உபயோகத்துக்கு வந்து நான், ஒரு ரேடியோ பெட்டியூண்டு அளவிலுள்ள தானியங்கி மினி நானோ-ஹெலிக்காப்டரில் வைத்து நியூயார்க்கிலிருந்து சென்னையிலிருக்கும் என் ஆசானுக்கு பரிசுபொருள் ஒன்றை கூரியர் போல அனுப்புவேன். அந்த கால தூதுபோன புறாபோல சென்னைபோய் திரும்ப என்னிடம் வரும்.கொஞ்சம் ஓவர் கற்பனையோ?
அதுவரை நியூயார்க் தாக்குபிடிக்கவேண்டும்.அணுஆயுத போர் வந்தால் அது தான் முதல் டார்கெட் அப்படி இப்படினு பலரும் பலதாய் பேச அது பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.கலிபோர்னியா போகலாமெனில் அங்கு ஒரு மாபெரும் பூமியதிர்ச்சி வர காத்திருக்கின்றதாம்.டிக் டிக்... திக் திக்...
நிற்க
இது போல முன்பு அரசு பயன்பாட்டிலிருந்து இப்போது பொதுவில் வந்துள்ள ஒரு கருவி தான் Spy Finder Hidden Camera Detector/Locator.இது என்னமோ principle of optical augmentation முறைப்படி வேலை செய்கின்றதாம். இந்த கையடக்க கருவி வழி சுற்றும் முற்றும் பார்த்தால் எங்காவது Hidden Camera இருந்தால் அது உடனே உங்களுக்கு காட்டிகொடுத்து விடுமாம்.
கலியுகத்தில் இது ஒரு நல்ல பரிசுபொருளோவென தோன்றுகின்றது. ஏதோ ஒரு இணையபக்கத்தில் அவரை பாவம் அப்பாவி ஏமாந்தவராய் பார்க்கமாட்டோம்.
http://www.brickhousesecurity.com/sf-103.htmlலதா "பாம்பு காட்டில் ஒரு தாழை" கவிதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக.Latha Paambu kaatil oru thaazhai kavithaikal in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
7/03/2008 02:29:00 AM
5
comments
Labels: Security
Sunday, June 15, 2008
கடிவாளங்கள்
இன்று வீட்டுக்கு வீடு கணிணி.30 வருடத்திற்கு முன்பு இப்படி வீட்டுக்கு வீடெல்லாம் கம்ப்யூட்டர் வருமென்று யாராவது கனவு கண்டார்களா? தெரியாது. நாசாவிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே இருக்கும் விலையுயர்ந்த மிருகமாக அது அப்போது கருதப்பட்டது. இன்று நடு அறை கணிணியில் அப்பா பிபிசியில் செய்தி பார்த்துக் கொண்டிருக்க உத்து பாக்குது குட்டிப் பாப்பா. தாத்தா கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு வந்து நிற்கின்றார். பாட்டிக்கு யூ.கேயிலுள்ள தன் தங்கையை வெப்கேமில் பார்க்க ஆசை. கான்எடிசனுக்கு (மின்சாரத்துக்கு) பணம் கட்டுவது காம்கேஸ்டுக்கு (இணையம்) பணம் கட்டுவது என அம்மாவுக்கு தலைக்கு மேல் வேலையுள்ளது. எல்லாம் கணிணி வழிதான்.
இப்படி டி.வி போல் நம் குடும்பத்தில் புதுசாய் அங்கமாகிப்போன கணிணியை நம் குடும்பத்துக்கு ஏற்ற நண்பனாக மாற்ற சில கடிவாளங்கள் நாம் போட வேண்டியுள்ளது. அறிந்தோ அறியாமலோ நம் வீட்டு சிறுசுகள் தவறாக தவறான தளங்களுக்கு செல்ல அல்லது வயதுவந்தோர்க்கான தளங்களுக்கு சென்றுவிட வாய்ப்புகள் உள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள், அசிங்கங்கள், மர்ம நபர்கள், ஜாதிமதபேத வெறிகள் இதிலிருந்தெல்லாம் நம் குழந்தைகளை கொஞ்ச காலமாவது விலக்கிவைத்திருக்கலாம் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாகவே இருக்கும். நீங்களும் அப்படிப்பட்ட ஒரு பெற்றோரானால் உங்கள் கணிணிக்கு இலவசமாய் கடிவாளம் போடலாம்.எப்படி?
ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உணர்ந்த Blue Coat Systems எனும் நிறுவனம் K9webprotection எனும் மென்பொருளை அனைத்து பெற்றோர்களுக்கும் இலவசமாய் வழங்குகின்றார்கள். இம்மென்பொருளை நீங்கள் இறக்கம் செய்து உங்கள் கணிணில் நிறுவினால் நிச்சயம் ஒரு பாதுகாப்பை உணர்வீர்கள். அடிப்படையிலேயே பல தளங்களை தடைசெய்யும் இம்மென்பொருளை உங்கள் விருப்பற்றிற்கு ஏற்றார் போல் கூடுதல் தளங்களை கூட்டவோ அல்லது சில தளங்களின் மீதான தடையை நீக்கவோ செய்து கொள்ளலாம். தவறுதலாக அவர்கள் மோசமான இணையதளம் பக்கம் போனால் "Prohibited" screen வரும் அல்லது ஒரு குரைக்கும் நாய் வருமாறு செய்யலாம். நீங்கள் உசாராகி விடலாமே?.
கீழ்கண்ட சுட்டியிலிருந்து நீங்கள் இறக்கம் செய்துகொள்ளலாம்.(Free registration required to get the License)
http://www.getk9.com
பொதுவாக உங்கள் வீட்டு கணிணியை எல்லாருக்கும் தெரியும் வகையில் ஒரு பொது அறையில் வைப்பது நல்லது, அது போல குழந்தைகளுக்கு சில நடைமுறை அபாயங்களை சொல்லிக்கொடுப்பதும் தேவையே, உதாரணமாக சாட் ரூம் பேச்சுக்கள், முகமறியாதோரிடம் விலாசம் தொலைப்பேசி எண்கள் கொடுப்பதின் அபாயம் போன்றவற்றை சொல்லிகொடுத்து உசார் படுத்தி வைத்தல் எப்போதுமே நல்லது.ஷைலஜாவின் "காலமெல்லாம் காத்திருப்பேன்" காதல் க்ரைம் தொடர் கதை இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Shailaja Kaalamellam Kaathiruppen Story in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
6/15/2008 11:15:00 AM
2
comments
Sunday, June 08, 2008
பச்சக்கலரு சிங்கிசாங்
வலையுலகில் நல்ல பசங்ககளுக்கும் கெட்டப் பசங்ககளுக்கும் உள்ள தொடர் போரில் யார் வெற்றி பெறப் போகின்றார்கள் என்பது இன்னும் சஸ்பென்சாகவே உள்ளது.நல்ல பசங்க எட்டடி பாய்ந்தால், எங்கோ கணிணியே கதி என்று பேஸ்மென்டில் கிடக்கும் கெட்ட பயல்கள் பதினாறடி பாய்கின்றனர். முன்பெல்லாம் கணிணி ஹேக்கிங் என்பது ஒரு குறிப்பிட்ட சாராரின் ஆர்வமாகவும் பொழுது போக்காகவுமே இருந்து வந்தது. இப்போது அது முற்றிலும் உருமாறி வணிக ரீதியாகிக் கொண்டிருக்கின்றது. பேட்டை ரவுடிகளைப் போல் போட்டி பொறாமை உள்ள எதிரிகள் மீது கெட்ட பசங்ககளை ஏவிவிட்டுவிட்டு பின்பு அவர்களை காசுகொடுத்து சரிபண்ணுவது வரைக்கும் வந்துவிட்டது. முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் உங்கள் கணிணியை தின்பதை பார்த்து, பெரு நிறுவனங்களை கலங்கடித்ததை பார்த்து அதை உருவாக்கியோர் மகிழ்ந்தனர். அதோடு விட்டு விட்டனர். இப்போது கணிணி வைரஸ் வழியாயும் ஏதாவது காசு பண்ணமுடியுமா வென்று பார்க்கின்றார்கள். விசேஷ நாட்கள் தோறும் மின்னஞ்சல் வாழ்த்து வடிவில் உலா வரும் இன்றைய புகழ்பெற்ற ஸ்டார்ம் வைரஸ் (Strom worm) உங்கள் கணிணியில் வந்து விட்டால் அவ்வளவு தான். அமைதியாய் இருந்துகொண்டு இணையம் வழி உங்களுக்கு பல விளம்பரங்களை பாப் செய்து காட்டுமாம். அது வழி அதை படைத்தோர் காசு பண்ணுகின்றார்கள்.தினமும் 2 மில்லியன் டாலர்கள். எப்படி இருக்குது கதை.
ஒரு இணையதளம் நம்பத்தகுந்த இணையதளம் தானா அதில் காசுகொடுக்கல் வாங்கல் தைரியமாக வைச்சுக்கலாமா இதை எப்படி கண்டறிவது? நல்ல பசங்க எல்லாம் ஒன்று சேர்ந்து Extended Validation SSL certificates -ன்னு ஒன்று கொண்டு வந்திருக்கின்றார்கள். பயந்துடாதீங்க. எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய அத்யாவசிய விஷயம் தான் இது. அதாவது நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 வைத்திருந்தால் அதில் போய் www.paypal.com என டைப்புங்கள். சட்டென மேலிருக்கும் அந்த விலாசச்சட்டம் பச்சை நிறத்தில் மாறும். அதாவது பேபால் இணையதளம் பாதுகாப்பான இணையதளம். நீங்கள் பாதுகாப்பான இணைய பக்கத்தில் தான் இருக்கின்றீர்கள் என அது காட்டுகின்றதாம்.
பழைய SSL certificate உள்ள தளங்களில் பூட்டு ஒன்று தோன்றும் அது வழி அது பாதுகாப்பான இணைய பக்கம் என தெரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த விஷயம் கணிணியில் நாலும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.சராசரிகளுக்கு தெரியாதல்லவா அதனால் தான் இப்படி கலர் போட்டு காட்ட முடிவெடுத்திருக்கின்றார்கள்.புதிதாக வெளிவரவிருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 3-ம் இது மாதிரி பச்சை வண்ணம் காட்டுமாம்.
ஆக இனி அட்ரஸ்பாரில் பச்சைவண்ணம் இருக்கும் வரை அப்பக்கத்தை நம்பி உங்கள் கடவுசொல்லை தட்டலாம். பச்சைநிறமில்லாவிட்டால்... உஷார் அது பிஷ்ஷிங்(போலி) சைட்டாக கூட இருக்கலாம்.இது சற்று புதிய தொழில் நுட்பமாதலால் அநேக வணிக இணையதளங்கள் இப்போதுதான் இதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
சீப்பாகவும் எளிதாகவும் பழைய SSL certificate-கள் கிடைப்பதால் சமீபகாலமாக பல போலி தளங்கள் கூட அவைகளை வாங்கி பிரவுசரில் பூட்டு படம் காட்டி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதால் நல்ல பசங்க இதுமாதிரி Extended Validation SSL certificates கொணாந்திருக்கிறார்கள். ஒரு EV சர்டிபிக்கேட் வாங்குவதற்குள் உயிர்போய்விடுமாம். ஏகப்பட்ட விலை. கன்னா பின்னாவென சோதனை சரிபார்த்தல் இருக்குமாதலால் கெட்டபசங்க கொஞ்சம் அடங்கி கிடப்பார்கள் என்பது நல்லதுகளின் எண்ணம்.
மரியாதைக்குரிய பேராசிரியர் சாலமன் பாப்பையா ஐயா அவர்களிடம் இதைச் சொன்னால் "அட இதெல்லாம் வெளங்குமாய்யா" என்பார். :)உமா பாலகுமார் -ன் மவுனம் கலைந்த தேவதை! நாவல் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Uma Baalakumar Mounam Kalaintha Devathai! novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
6/08/2008 11:13:00 PM
5
comments
Wednesday, June 04, 2008
கிரெடிட் கார்டு ரோபோ
பரிமளாவின் இந்தியப்பயணம் இப்படி ஒரு படுதோல்வியில் முடியும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கோபாலுக்கு மட்டும் மகிழ்ச்சியே.இங்கே ஒரு சின்ன ப்ளாஷ் பேக். பரியின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது எங்களுக்கெல்லாம் தெரியும்.ஆனால் அதற்கான காரணம் யாருக்கும் தெரியாது.அவள் யாரிடமும் சொன்னதும் இல்லை.பரி இந்தக்கால சில பெண்டிரைப்போலவே ஒரு துடுதுடுப்பான வகை.எல்லாரிடமும் கல கல வென பேசுவாள்.இதில் ஆணெண்றும் பெண்ணென்றும் கிடையாது.அப்போதுதான் புதுசாய் அறிமுகமானவர்களிடம்கூட மட மட வெனப் பேசுவாள்.கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தால் நமக்கு இவள் ஒரு குழந்தையோவெனத் தோன்றும். அவள் அணியும் ஆடைகள் மட்டும் விழுந்துவிடுமோ பறந்துவிடுமோவென அச்சமூட்டும். அவளின் முதல் திருமணத் தோல்விக்கு இதில் ஒன்றுதான் காரணமா இல்லை நாமறியா வேறொன்றா தெரியாது.எனினும் சந்தேக நோய் எளிதாய் எந்த இல்லறத்தையும் கொன்றிடும் என நமக்கெல்லாம் தெரியுமன்றோ.
இது சமீபத்தில் நடந்தது.அந்த கேரளத்து ஆண்நண்பர் இணைய சாட்டிங்கின் மூலம் அறிமுகமாகியிருக்கின்றான். நன்றாகவே ஆன்லைனில் கொஞ்சநாள் பழகியிருக்கின்றார்கள். சில மாத அரட்டையில் இவளுக்கு தெரிந்தது அவர் கேரளாவில் இருக்கின்றார், 2 எஸ்டேட்கள், ஒரு பங்களா, சில கார்களுக்கு சொந்தக்காரர்,அவரும் இவளைப் போலவே முதல் திருமணத்தில் தோல்விகண்டவராம். இந்தியா போய் அவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டு திரும்ப வருவது தான் அவளின் நோக்கமாய் இருந்தது.
ஊர் வந்து பார்த்த பின்பு தான் தெரிந்தது அது ஒரு பிராடு பேர்வழி என்று.தப்பித்தோம்டா தம்பிரான் புண்ணியமென போன வேகத்திலேயே திரும்பிவந்து விட்டாள்.இப்போது அவள் still looking.
நேற்று பேசிக்கொண்டிருக்கும் போது அவள் கிரெடிட் கார்ட்டு பற்றிய பேச்சு வந்தது."பிகேபி, கேன் ஐ ஆஸ்க் யூ சம்திங். கிரெடிட் கார்ட்டின் பிராடு அலர்ட் சிஸ்டம் எப்படி வொர்க் ஆகுதுப்பா.ஆச்சரியமாய் இருக்குது.நான் இல்லாமல் வேறு யாராவது என் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் அதெப்படி அவர்கள் கண்டு பிடிக்கின்றார்கள்."
புத்திசாலித்தனமாக கேள்வி.சீரியசாகவே அவள் கேட்பது போலிருந்தது.
வழக்கமாக வியாக்கியானம் சொல்ல ஆரம்பித்தேன்.
"கிரெடிட் கார்டு கம்பெனிகளின் ரோபோக்கள் ரொம்ப ரொம்ப புத்திசாலித்தனமானவை. ரோபோ என்றதுமே கை கால் தலையுடன் கூடிய மனித எந்திரமென நினைத்து விடாதே. நான் சொல்லும் ரோபோ ஒரு மென்பொருள்.இடைவிடாது செர்வரில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு சாப்ட்வேர் சர்வீஸ். நீ கடனட்டை வாங்கின காலத்திலிருந்தே அதற்கு உன்னை நன்றாகத்தெரியும். நீ இந்த உலகின் எந்த பிராந்தியத்தில் வசிக்கின்றாய். எந்தெந்த மால்களுக்கு செல்கின்றாய். என்னென்ன வாங்குகிறாய்,எங்கெல்லாம் போகின்றாய்,அதிக பட்சம் எவ்வளவு நீ செலவு செய்வாய் இதெல்லாம் அதற்குத் தெரியும். ஆக உன் செலவு செய்யும் பழக்க வழக்கம் அதாவது உன் spending pattern அதற்கு நன்றாகவே தெரியும்.இதில் எதாவது ஒரு அப்நார்மல் அதாவது அசாதாரண சம்பவம் நடந்தால் உடனே அந்த ரோபோ குரல் கொடுக்கத் தொடங்கிவிடும். நீ நியூயார்க்கில் இருப்பது அந்த ரோபோவுக்குத் தெரியும். உன் கிரெடிட்கார்டு தகவல்கள் திருடுபோய் அது சீனாவில் ஒரு திருடனால் பயன்படுத்தப்பட்டால் ரோபோ உஷாராகிவிடும். அதுபோலத்தான் உன் வழக்கத்துக்கு மாறாக அதிகமாய் உன் கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டாலும் அய்யாள் கொடிதூக்கி அலர்ட் அனுப்பிவிடுவார். இப்படித்தான் உன் கிரெடிட்கார்டும் தானாகவே உஷார்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டுப்போயிருக்கும். இதெல்லாம் தாண்டி நாமும் ஒவ்வொரு மாதமும் கடனட்டை அறிக்கை வரும் போது வரி வரியாய் சரிபார்ப்பது நமக்கு நல்லது.அது போல உன் ஆன்லைன் கிரெடிட்கார்டு அக்கவுண்டில் கூட ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேல் பேலன்ஸ் போனால் அலெர்ட் அனுப்பவும் செட்டிங் செய்து வைத்திருப்பது நல்லது "என்றேன்.
ஆர்வமாய் கேட்டுக்கொண்டே இருந்தாள்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த கோபால் ஏதோ எனக்கு சொல்லும் சங்கேதமாக கனைத்தான். எனக்கு புரிந்தது.
கோபாலும் பரியும் நேகாவும் ஜெர்ஸிகார்டன்ஸ் மாலுக்கு கிளம்பினார்கள்.
அ.முத்துலிங்கம் கதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. A. Muthulingam Kathaigal in Tamil Stories pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
6/04/2008 10:41:00 PM
0
comments
Labels: Security
Saturday, May 10, 2008
காம்ப்ரமைஸ்ட்
கோபாலுக்கு அவ்வளவாய் கைப்பேசி அழைப்புகள் வருவதில்லை.எப்போதாவது "Severity Level 1" என அவன் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து குறுஞ்செய்தி வரும். அரக்க பரக்க ஓடுவான். நேற்று நானே வியக்கும் வகையில் அவனது கைப்பேசி செல்லமாய் இசைத்தது. ஓடிப்போய் எடுத்தவன் வாயெல்லாம் புன்னகை. அடுத்த நொடி முகம் இறுகியது.
போனை என்னிடம் கொடுத்தான்.மறுமுனையில் பரிமளா.
"பிகேபி யூ நோ வாட். ஐம் இன் எ டீப் ஷிட் மேன்" என்றாள்.
என்ன சொல்கின்றாள் இவள்.இவளுக்கு என்ன ஆயிற்று.
தொடர்ந்தாள்.
"ஒகே..லிசன்...பிகேபி என்ன ஆச்சுன்னா..பொதுவா இந்தியா வந்தா நான் மெயிலே செக் பண்ணமாட்டேன்.நேற்றைக்கு நேகா வீட்டில் மெயில் செக்பண்ண சான்ஸ் கெடச்சது."Fraud Prevention Alert From Your HSBC Credit Card" -னு ஒரு மெயில் வந்திருந்தது. பயந்து போய் அவங்க கொடுத்திருந்த டோல் ஃபிரி நம்பர்ல கால் செஞ்சா காலே போகமாட்டேங்குது. டிங் டிங் அவ்ளோதான். கட் ஆயிடுது. இப்போ நான் என்னப் பண்ணறது?" பதட்டமாய் கேட்டாள் பரிமளா.
"ஹே! பர்ஸ்ட் ரிலாக்ஸ்ப்பா" -ன்னு சொன்ன நான் அந்த இலவச அழைப்பு உதவி தொலைப்பேசி எண்களை கேட்டேன்.
"18004199782,18317597070" -னு சொன்னாள்.
இந்தியாவிலிருந்து அமெரிக்க 1800 எண்களை குப்பிடும்போது 1-றை எடுத்து விட்டு அழைக்க வேண்டுமென கூறினேன்.
18004199782-க்கு பதிலாக 008004199782
18317597070-க்கு பதிலாக 008317597070
சும்மாவாலும் எண்களை தட்டிப் பார்த்தவளுக்கு மறுமுனையில் மணியோசை கேட்டிருக்கும் போலும்.
"கால் யு பேக்"-னு சொல்லிவிட்டு பட்டென வைத்துவிட்டாள் படு பாவி.
இங்கே கோபால் இன்னும் என்னை முறைத்துக்கொண்டே இருந்தான்.
ஐந்தே நிமிடத்தில் மீண்டும் அவன் கைப்பேசி இசைக்க
"நீயே எடு" என்றான்.எடுத்தேன்.
பரிமளாதான்.
"பிகேபி, அந்த ஸ்டுப்பிட் என் கிரெடிட் கார்டு compromised ஆகிட்டுதுனு சொன்னான் அப்படீன்னா..?"
"அடடா..அப்படியாச் சொன்னான் compromised-னா உன் கிரெடிட் கார்டு டீடெய்ஸ் எல்லாம் எப்படியோ திருட்டு போயிட்டுதுனு அர்த்தம். யாராவது மிஸ்யூஸ் பண்ண பார்த்திருப்பாங்க போல" என்றேன்
"அப்படித் தான் தெரியுது பிகேபி. அவன் சொன்னது எதுவும் எனக்கு ஒழுங்கா கேக்கல. நியூயார்க் வந்து HSBC-க்கு திரும்பவும் கால் பண்ணணும்.அது வரை என் கிரெடிட் கார்டை பிளாக் பண்ணி வைத்திருப்பதாக அவன் சொன்னான்" என்றாள்.
"குட் பார் யூ" என்றேன்.
"இனிமே என்ன ஆகும்"
"ஒண்ணும் ஆகாது.இங்க வந்ததும் கால் செய்து Recent transaction-எல்லாம் கேட்டு உன் பர்சேஸ்களை மட்டும் கன்பார்ம் பண்ணிடு.மிச்சத்தை அப்புறம் பார்க்கலாம்" என்றேன்.
"ச்சே.. இப்போதைக்கு நான் இந்த கிரெடிட்கார்டை இங்கே யூஸ் செய்யமுடியாது இல்லையா"
"ஆமாம்" என்றேன்."ஆனா உன் Debit card-யை இந்திய ஏடிஎம்-களில் பயன்படுத்தலாம்" என்றேன்
"வாட்!!"
"ஆமா உன் அமெரிக்க பாங்க் அக்கவுண்டிலிருக்கும் பணத்தை இந்திய ரூபாயாக எடுத்துக்கலாம். ஆனா என்ன கொஞ்சம் பீஸ் எடுத்துப்பார்கள்.எக்சேஞ்ரேட் கொஞ்சம் கம்மியா இருக்கும்" என்றேன்.
"தட்ஸ் ஓகே.ஒரு குட் நியூஸ் சொன்ன.இப்பத்தான் என் உயிர் வந்தது பிகேபி" என்றாள்.
பேசி முடிந்ததும் கோபால் என்னிடம் கேட்டான். "ஏண்டா அதெல்லாம் என்கிட்ட கேட்க்காமல் உன்கிட்ட கேட்டா, அதுவும் என் செல்போன்லயே கூப்பிட்டுட்டு"
எனக்கு பதில் எதுவும் சொல்லத்தெரியவில்லை.
கொஞ்சநேரம் யோசித்துக்கொண்டிருந்தான்.
பின் தீர்மானமாகச் சொன்னான் "நானும் Blog எழுதப்போறேன்"விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ஒரு அறிமுகம் தமிழில் பிடிஎப் பக்கங்கள். Introduction to Windows XP and Windows Explorer in Tamil pdf pages Download. Right click and Save.Download
Posted by
PKP
at
5/10/2008 10:20:00 PM
4
comments
Labels: Security
Friday, May 09, 2008
திருட்டுத்தனமாய்..
தவிர்க்கவே இயலாதநிலமைக்கு இணையவழி வர்த்தகங்களும், இணையவழி வங்கிச்சேவைகளும் வந்துவிட்ட போதிலும் அவ்வப்போது நாம் கேள்விப்படும் சில தகவல்கள் இந்த மொத்த வலைக்கட்டுமானத்தையும் சிறிது சந்தேகக்கண்ணோடேயே எப்போதும் பார்க்கவைத்து விடுகின்றது.
எடுத்துக்காட்டாக இரவுபகலாக உழைத்து நான் எழுதிய மின்புத்தகம் ஒன்றை இணையத்தில் விற்பனைக்கு வைத்துள்ளேன் என வைத்துக்கொள்வோம் அல்லது ஏதோ ஒரு குப்பை மென்பொருளை சற்று கவர்ச்சியாக்கி பல மார்க்கெட்டிங் யுத்திகள் பயன்படுத்தி, அதாவது இதை பயன்படுத்தி கலிபோர்னியா ஜாக் மாதம் $3000 சம்பாதிக்கின்றார், ஷாங்காய் டிங்டியூங் மாதம் $5000 சம்பாதிக்கின்றார் என்றெல்லாம் ரீல் விட்டு அந்த மென்பொருளை நான் விற்க்க , அதை ஏதாவது ஒரு ஏமாளி $50 கொடுத்து வாங்க அதன் மூலம் நான் பணம் சம்பாதிக்க இதெல்லாம் சகஜம்.
50 டாலர் கொடுத்து வாங்கிய அவன் கொடுக்கப்பட்ட 200 பக்க மின்புத்தகத்தை அட்டை டூ அட்டை படித்து அதன் படி செயல்பட்டால் தான் ஆரம்பத்தில் வாரத்துக்கு 2 டாலராவது பார்க்க முடியும். அதையும் தாண்டி இன்னும் பல தொழில்நுட்ப கோளாறுகளையும் போராடி வென்று இல்லை இல்லை வெறுத்துப்போவான். அடப் போனா போகுது 50 டாலர்னு நிமிடத்தில் வாங்கிய மென்பொருளையும் மின்புத்தகத்தையும் அழித்துவிட்டு உருப்படியான வேறு வேலை பார்க்க சென்றுவிடுவான்.
காசு சம்பாதிக்க ஆலோசனை தருகின்றேன், Make money using Adsense, Wordpress, ebay, Blogger, Make money using affliates, Websites அப்படி இப்படினு சொல்லி ஈபுக் பேக்கேஜ் விற்க்கிறவன் மட்டும் நல்ல காசு பார்த்துக்கொண்டிருப்பான்.
பாருங்கள், எதையோ சொல்லவந்து எங்கேயோ வந்து விட்டேன்.
ஓகே, இதுமாதிரி ஆன்லைனில் மென்பொருளோ அல்லது மின்புத்தகமோ விற்பவர்களிடம் போய் வாங்கும் போது முதலில் நம் பெயர் விலாசம் போன்ற தகவல்களையெல்லாம் கேட்பர், அடுத்து கிரெடிட்கார்டு அல்லது பேப்பால் வழி காசு கொடுக்கவேண்டும், காசு கொடுத்து முடிந்ததும் அவர்கள் நம்மை ஒரு பாதுகாப்பான பதிவிறக்கப் பக்கத்துக்கு கொண்டு செல்வர். அங்கு அவர்கள் நமக்கு நன்றி சொல்லி விட்டு ஒரு சுட்டி கொடுப்பர் அந்த சுட்டியிலிருந்து அந்த குறிப்பிட்ட மென்பொருளை அல்லது மின்புத்தகத்தை இறக்கம் செய்து கொள்ளலாம். இதை Thankyou page அல்லது Download page என்பர்.
சரி.இருக்கட்டும்.இப்போது இந்த Thankyou Page-க்கு காசு கொடுக்காமலே நேரடியாக போவதற்கு வழி தெரிந்துவிட்டால்.உங்களுக்கு 50$ லாபம். அவர்களுக்கு 50$ நஷ்டம். இல்லையா? ஆமாம். அப்போ அந்த Thank You Page-க்கு நேரடியாக போவது எப்படி?
பொதுவாக இந்த Thank You Page-களை கூகிளில் நீங்கள் தேடினாலே மாட்டும். பெரும்பாலும் கூகிள் இப்பக்கங்களை தேடலில் காட்டமாட்டான். ஆனால் கூகுளும் காண்பிக்க நான் பாத்திருக்கின்றேன். Alexa தேடு எந்திரம் தான் ரொம்ப டேஞ்சர்.
இந்த தேடு எந்திரங்களில் போய் A charge from CLKBANK அப்படினு தேடினால் ஏகப்பட்ட Thankyou page-கள் அகப்படும்.இப்படி நேரடியாக திருட்டுத்தனமாய் "நன்றிப் பக்கம்" போய் பிறரின் டிஜிட்டல் சொத்துக்கள் திருடப்பட வழிகள் இருக்கின்றன. உங்களுக்காக ஒரு எடுத்துக்காட்டு சுட்டி கொடுத்திருப்பேன். ஆனால் யாரோடேயாவது வயிற்றில் கைவைத்தல் பாவம் இல்லையா.
இப்போது சொல்லுங்கள்.எதை நம்பி இந்த இணையத்தில் நாம் கடை விரிக்க.
நண்பர் Prakash K கேட்டிருந்தார்.
Hi PKP,
Ur blog is cool... learned a lot from your blog, Need some advice from you for joining gold quest, could you please keep one post for gold quest....?
பிரகாஷ்! இது பற்றி நண்பர் பொன்வண்டு ரொம்ப விரிவாய் எழுதியிருக்கின்றார்.
எட்டிப்பாருங்கள். குவெஸ்ட் நெட் மோசடி! மென்பொருள்துறையினர் பாதிப்பு!
(தமிழ்மொழி நன்கு அறிந்தோருக்கு ஒரு சிறு கேள்வி: தவிர்க்க, விற்க்க என்ற வார்த்தைகளில் புள்ளிகொண்ட எழுத்துக்கள்(மெய் எழுத்துக்கள்) இரண்டு சேந்து வருகின்றனவே இது தவறா? இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தால் போல் ஒரு வார்த்தையில் வரக்கூடாதுவென பள்ளியில் படித்தது போல் ஒரு நியாபகம்)
சுஜாதா சிறுகதை எப்படியும் வாழலாம் Sujatha Eppadiyum Vaazalaam Short story in Tamil pdf Download. Right click and Save.Download
Posted by
PKP
at
5/09/2008 12:21:00 AM
12
comments
Labels: Security
Sunday, April 27, 2008
ரொம்ப வருத்தம்
இப்படி ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பதிவை நான் வெளியிடுவேனென்று என்றுமே நான் நினைத்ததில்லை. சொல்லவேண்டிய சில காரியங்களை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தால் இங்கு சொல்கின்றேன். அப்படி நான் ஒன்றும் புண்ணியவான் இல்லை. நமீதா 200ரூவா ஆபாசம் விசிடி பற்றி பதிவுகளில் கேள்விபட்ட உடனே அதிஷ்டமோ என்னமோ அதற்கான சுட்டியும் நம்மிடம் மாட்டிவிடுகின்றது.எல்லாம் 8 நிமிட கப்சா வீடியோக்கள்.
ஆனால் நிஜ கணவன்கள், நிஜ மனைவிகளின் ரகசிய விடியோக்கள் ரேப்பிட்ஷேர் சுட்டிகளாக வரும் போது தான் ரொம்ப வருத்தமாய் இருக்கின்றது. அதுவும் இந்திய தம்பதிகளின் அந்தரங்க விளையாட்டுக்கள். பெரும்பாலான வீடியோக்களில் அந்த மனைவியோ அல்லது அந்த பெண் நண்பியோ கேமராவை அணைக்க சண்டைபோடுவாள். அதையும் மீறி அவன் திமிராய் கேமராவை ஸ்டெடியாய் செட் செய்து வைத்திருப்பான். அல்லது அந்த ஒளிப்பட பெட்டியை மறைத்து வைத்திருப்பான். ஆண்கள் மேல் வெறுப்பையே வரவைக்கும் வக்கிர நாய்கள் அவன்கள். மற்றும் சில பெண்கள் அப்பாவியாய் விடயம் தெரியாது இருப்பர். அந்த ஆண் நாய் முடிந்த வரை தன் முகத்தை மறைக்க முயன்றுகொண்டே இருப்பான். தன் கூத்துக்களை வீடியோவில் பார்க்கும் சில நிமிட அற்ப சுகத்துக்காக ஆண் மிருகம் செய்யும் அந்த ஆபாச ரெக்கார்டிங் இணையத்தில் ஒரு முறை வந்து விட்டால். பன்னிக்குட்டி மாதிரி. தடுக்கவே முடியாது.சரமாரியாய் பரவிக்கொண்டே இருக்கும். இந்த இளம் தம்பதிகள் சுதந்திரமாய் வெளிஉலகம் வருவது எப்படி?.
ஏதோ ஒன்றோ இரண்டோ முறை ஞானி போல் இண்டர்நெட் சாட்டில் தன்னிடம் பேசிய , சில ஆறுதல் வார்த்தைகள் பேசிய அந்த தொலைதூர ஆணை நம்பி தன்னை முழுசாய் வெப்கேமில் காண்பிக்க அவள் மனம் வருகின்றது. உஷாராய் இவன் ரெக்கார்ட் செய்து அந்த காணொளொயை இணையேற்றம் செய்து விடுகின்றான் அவள் நம்பிக்கையில் மண்ணை வாரி போட்டு விட்டு. இவள் மானமும் இணையக் கப்பல் ஏறிவிடுகின்றது.
எந்த குடும்ப பெண்ணும் அதுவும் நம் நாட்டு குடும்ப பெண்கள் கணவன் அல்லது தனது பாய்பிரண்டு மகிழ்ச்சியாய் இருக்க எது வேண்டுமானாலும் செய்வாள், எதைவேண்டுமானாலும் அனுமதிப்பாள்- ஆனால் தன் உடம்பு இணையத்தில் காட்டிபொருளாய் இருக்க ஆசைப்படுவாளா என்பது சந்தேகமே.
ஸோ... இந்த நவீன உலகில் சில படுக்கையறை ஒழுக்கங்களை உங்கள் நலனுக்காக வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெப்கேம், கேமெரா, கேமரா உள்ள செல்போன் இதையெல்லாம் படுக்கையறைக்கு வெளியே மட்டும் கண்டிஷனாய் வைத்திருங்கள்.
மீறி வெப்கேமோ, கேமரா உள்ள செல்போனோ, அல்லது வேறெதாவதொரு கேமராவோ படுக்கையறைக்கு கொண்டுவரும் கணவன் எவனானாலும் அவனை செருப்பால் அடியுங்கள். அப்படியொரு ரசனை அவனுக்கு தேவையில்லை.
நம் பெண்கள் இதற்கெல்லாம் சளைத்தவர்களில்லை என்ற நம்பிக்கை இருக்கின்றது. செய்திகள் வரலாம்.
ஸாரி...நண்பர்களே! இப்படி ஒரு dirty பதிவு! :)இராஜன் முருகவேல் அவர்களின் தமிழ் நாவல் "ஐஸ்கிரீம் சிலையே நீதானோ?" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Rajan Murugavel "Ice Cream Silaiye Neethano" Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
4/27/2008 04:56:00 PM
11
comments
Labels: Security
Tuesday, April 22, 2008
பரிமளா போன பாதை
வெள்ளிக்கிழமை என்றாலே பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஏகத்துக்கும் குஷிதான்.ஏனென்றே எனக்கு தெரிந்ததில்லை. கார் சாவியை சுழற்றிச்சுழற்றி ஏதோ ஒரு பாடலை முணங்கிக்கொண்டே அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும் அவள் அரைமணிநேரத்தில் ரெடியாகிவிடுவாள். கிளம்பி போனவள் போனவள் தான். திரும்பிவர நள்ளிரவும் தாண்டிவிடும்.இதையெல்லாம் இங்கு நான் கட்டாயம் சொல்லத்தான் வேண்டுமாவென நினைத்தேன். சொல்லிவிடுவதுதான் நல்லது.அதற்கான காரணத்தையும் அப்புறம் சொல்கின்றேன்.
எங்கு போகின்றாள் இவள்? மாலை முதல் நள்ளிரவுதாண்டியும் அப்படி எங்கே அவள்?
போன வாரம் கிளைமாக்ஸ் நடந்தது.
வெறும்(!) 230 டாலர்கள் தான். ஆன்லைனில் ஆர்டர்பண்ணியிருந்த LandAirSea GPS Tracking Key வந்துவிட்டிருந்தது. சிறுசா தீப்பட்டிமாதிரி. ஒரு USB கொக்கியும் இருந்தது. சில பேட்டரிகள் நாம் போடவேண்டும்.பரிமளாவுக்குத் தெரியாமல் அவள் டொயோட்டா கேம்ரி காரின் அடியில் அந்த டிராக்கிங் கீயை நச்சென ஒட்டவைத்தேன். அதிலிருந்த காந்தம் பரிமளாவின் காரை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.
இனி இந்த கார் எங்கெல்லாம் போகுமோ அதெல்லாம் எனக்கு சந்து சந்தாக தெரிந்துவிடும். எவ்வளவு வேகமாக அவள் காரை ஓட்டினாள் (அவள் ஒரு பறக்கும் பாவை) எங்கெல்லாம் எவ்வளவு நேரம் அவள் நின்றாள் எல்லாம் இந்த கீ நோட் செய்து வைத்துக்கொள்ளும். அடுத்த நாள் அந்த Tracking Key-யை எடுத்து வந்து எனது கணிணியில் செருகி பார்த்தால் அத்தனையும் மேப் போட்டு துல்லிபமாய் எனக்கு காட்டிவிடும்.
இதுமாதிரி யாரை வேண்டுமானாலும் நீங்கள் கண்காணிக்கலாமாம் அதுவும் உலக அளவில். அதனால் இனிமேல் "ஒருமாதியான" இடங்களுக்கு போவதாய் இருந்தால் செல்லும்முன் காரை முழுசா சோதனை போட முடிவெடுத்திருக்கின்றேன்.
இன்றைய காலத்தில் தொழில்நுட்பத்தில் நீங்கள் ஆர்வமுள்ளவராய் இல்லாதவராயினும் நிகழ் கால தொழில்நுட்ப விசயங்களை கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.எது தொழில் நுட்பத்தால் முடியும் எது முடியாது இதெல்லாம் சகலோர்க்கும் தெரிந்திருக்க வேண்டிய நிலை. ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருந்தால் தெரிந்தவன் உங்களை கொள்ளை கொண்டு போய்விடுவான்.
சரி பரிமளாவின் கதையை நான் இப்போ எப்படி முடிக்கறது? ஒவ்வொரு மொழி பட இயக்குனர்களும் ஒவ்வொரு விதமாய் முடித்திருப்பார்கள். இல்லையா?
மேலும் அறிய
http://www.trackingkey.com
டிஸ்கிளைமர்: எனது பதிவுகளில் வரும் பக்கத்து வீட்டு பரிமளா முதல் பொன்னம்மா பாட்டி வரை அத்தனைபேரும் கற்பனை கதாபாத்திரங்களே Just In Case :)நெ.சி.தெய்வசிகாமணியின் மரியாதைராமன் கதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. N C Theiva Sigaamony Mariathai Raman Kathaikal in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
4/22/2008 11:42:00 PM
3
comments
Wednesday, January 23, 2008
பறிபோகும் பிரைவசி
கொஞ்ச நாட்களாகவே யாரோ என்னை கண்காணிப்பது போலவும்,நோட்டம் விடுவது போலவும் தோன்றிக் கொண்டே யிருந்தது. இன்றைக்கேனும் எப்படியும் எல்லார் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு யாருக்கும் தெரியாத கண்காணாத பிரதேசத்திற்கு போய்விடவேண்டும் என தோன்றியது.அதற்கான முயற்சியிலும் இறங்கிவிட்டேன்.
கையில் செல்போனை வைத்திருந்தால் என் செல்போன் தொடர்பு கொள்ளும் டவரை வைத்து எளிதாய் என் இருப்பிடத்தை யாரும் தெரிந்து கொள்ளலாம். ஆதலால் அவசரத்துக்கு உதவும் மொபைல்போனை கூட வீட்டில் விட்டு விட்டு செல்ல தீர்மானித்தேன்.
கார் திருடுபோனாலோ,வழிதப்பிப்போனாலோ அல்லது விபத்து நேரிட்டாலோ உதவும் என்ற நோக்கில் வாகனத்தின் அசைவுகளை நோட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் ஆன்ஸ்டார்(On Star) பொருத்தப்பட்ட எனது GM-காரில் செல்ல வேண்டாம் என முடிவெடுத்தேன். ஆன்ஸ்டார் வழி GM-க்கு நான் எங்கிருக்கிறேன் என தெரிந்துவிடும் அல்லவா?
அதனால் எனது சாதாரண ஹாண்டா அக்கார்டை இயக்கி ஆகா விடுதலை என்ற சந்தோசத்தில் சில மைல்கள் தான் சென்றிருப்பேன்.வந்தது சுங்கசாவடி. இப்போது காரிலிருந்த Easypass-க்கு தெரிந்து விட்டது நான் எங்கிருக்கிறேன் என்று. இவன் இப்போது இந்த இரு குறிப்பிட்ட டோல் பூத்துகளுக்கு இடையே தான் இருக்கிறான் என அது அடித்து சொல்லிற்று.
ஒரு வழியாய் ஒரு ஷாப்பிங்மால் வந்தடைந்தேன்.இங்கு நான் ஷாப்பிங் செய்ததையாவது யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் வச்சுக்கலாமென நினைத்திருந்தேன். ஆனால் நான் தேய்க்க கொடுக்கவிருக்கும் கிரெடிட் கார்டு நான் ஷாப்பிங்செய்ததை இடம் புள்ளி விடாமல் தெளிவாய் எடுத்துரைத்து விடுமே? பயம் வந்து விட்டது.
அதனால் கிரெடிட் அட்டையை பாக்கெட்டில் வைத்துவிட்டு பணமாய் கொடுத்துவிடலாமென நினைத்தேன்.ATM ஒன்றைத் தேடிப்பிடித்து பணம் எடுத்தேன். அந்த ATM மெசின் தெளிவாய் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தது.இந்தாள் இந்தநாள் இன்னநேரத்தில் இவ்விடத்திலிருந்து இவ்வளவு பணம் எடுத்தான் என்று.
தலை சுற்றிக்கொண்டு வந்தது. யாரோ என்னை பார்த்துக்கொண்டே இருப்பது போல் தோன்றிற்று. வாலட்டை திறந்தேன். ஒரு டாலர் நோட்டு. அதில் அந்த கண்.அட அதே கண்.அங்கிள் சாமின் கண்.என்னை பார்த்துக்கொண்டே இருந்தது.
உங்களையும் தான்.
பட்டாபியின் "சும்மாவா சொன்னாங்க பெரியவங்க" துறுதுறு தாத்தாவின் ஆச்சரிய அனுபவங்கள் மென்புத்தகம் Pattaapi "Summaavaa Sonnaanga Periyavanga" Tamil ebook Download. Right click and Save.Download
Posted by
PKP
at
1/23/2008 11:09:00 AM
8
comments
Labels: Security
Monday, December 24, 2007
வயர்லெஸ் கீ போர்டு அபாயம்
வயர்லெஸ் கீ போர்டு, வயர்லெஸ் மவுஸ் என வைத்துக்கொளல் இப்போதெல்லாம் ஆடம்பர விஷயமல்ல. வீடுகளிலும் அலுவலகங்களிலும் இவை மிக சகஜமாகிவிட்டன.
அசோக்நகர் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பின் முதலாவது மாடியில் ஹாயாக அமர்ந்து கொண்டு வயர்லெஸ் கீ போர்டுவழி உங்கள் கணிணியில் ஏதோ டைப்புகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு பாங்கிங் சைட் பாஸ்வேர்டாக கூட இருக்கலாம். அதை அப்படியே என்ன டைப்புகின்றீர்கள் என இரண்டாவது மாடியில் குடியிருக்கும் "பத்தாவது படிக்கும் சுட்டி" தெரிந்து கொள்ளலாம். எப்படி?
வயர்லெஸ் கீ போர்டுகள் நீங்கள் தட்டும் எழுத்துக்களை அப்படியே டைப்ப டைப்ப அவற்றை ரேடியோ அலைகளாக மாற்றி கணிணிக்கு அனுப்பிக்கொண்டேயிருக்கும். மேல்மாடி சுட்டி ரொம்ப தொலைவில் இல்லையே. அவர்களுக்கும் அந்த ரேடியோ அலைகள் எட்டும். இந்தகால பள்ளிக்கூட படு சுட்டிகளுக்கு ஒரு வயர்லெஸ் ரிசீவரும்,எளிய டிகிரிப்டோ மென்பொருளும் கிடைத்தால் போதும். மொத்தமும் காலி. ஏன் அப்பேர்பட்ட Microsoft Wireless Optical Desktop 1000/2000 keyboard-கள் கூட இதற்கு விதிவிலக்கில்லையாம்.
அக்கம் பக்கம் யார் இருக்கானு தெரிஞ்சு வச்சிக்கிறது ஒரு விதத்தில் நல்லது தான்.
More about this hack Video Text
சுபாவின் தமிழ் நாவல் "காத்திருக்கிறேன்" மென்புத்தகம் Subha Tamil Novel Kaathirukirean e-book Download. Right click and Save.Download Subha Kaaththirukkiraen Novel
Posted by
PKP
at
12/24/2007 12:59:00 PM
5
comments
Labels: Security
Wednesday, December 19, 2007
அம்பலம் ஏறும் அந்தரங்கங்கள்
டிஜிட்டல் உலகில் எல்லாமே செம ஸ்பீடு. டிஜிட்டலைஸ்ட் ஆகிய நடிகையின் கவர்ச்சி படமாகட்டும் அல்லது ரகசிய கசமுசா வீடியோவாகட்டும் அல்லது டிஜிட்டலைஸ்ட் ஆகிய ஒரு மென்புத்தகமாகட்டும் நொடிப்பொழுதில் உலகெங்கும் விஷ காய்ச்சல் போல் இணையம் வழி பரவிவிடும். என்னத்தான் பாதுகாப்பு முறைகள் கடைபிடித்தாலும் கலிபோர்னிய காட்டு தீ போல் இவை
பரவுகின்றன. உருவாக்குதல் தான் கடினம், காப்பி செய்ய சில நொடிப்பொழுதுகள் போதும். மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆயிரக்கணக்கானோரின் உழைப்பில் வெளியாகும் வீடியோ கேம்கள், விலைமிக்க மின் பொருள்களின் கதையும் அதுதான்.
ஏதோ ஒரு விபரீத ஆசையில் யாருக்கும் தெரியாமல் சிட்டி ஹாலின் மதிப்புமிக்க மேயர் ஆசனத்தில் தன் மனைவியை துளி கூட துணியின்றி அவரை அமரவைத்து படம் எடுத்து தன் வீட்டு கணிணியில் வைத்திருந்தார் ஒரு பிரிட்டன் நகர மேயர். தன் வீட்டு பசங்க வீட்டில் ஒரு பார்ட்டி வைக்க வெளியூர் சென்றிருந்தார் மேயர். அவர் பிள்ளைகளின் நண்பர்கள் மேயர் வீட்டு கணிணியில் விளையாட தவறுதலாய் சிக்கியது அந்த படம். எவ்வளவு நேரமாகும்? ஒரே கிளிக்கில் உலகெங்கும் பறந்தது அந்த ஜோடியின் அந்தரங்கம்.
இப்படி படமாயும், வீடியோவாயும் மாட்டி நோந்து போனோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதில் புதிது இப்போது ஒலிவடிவம்.
நண்பரிடம், நன்கு தெரிந்தவரிடம், காதலரிடம் தானே பேசுகிறேன் என்ற நினைப்பில் அந்தரங்கமாய் ஏதேதோ கிளுகிளுப்பாய் பேச அப்பேச்சுக்கள் முழுவதும் எதிர்முனை நபரால் பதிவு செய்யப்பட்டு MP3 ஒலி வடிவில் எடுக்கப்பட்டு இணையத்தில் உலவ விடப்பட்டால் எப்படி இருக்கும்?. டிஜிட்டல் உலகில் இது போன்றவை எளிதாய் சாத்தியம். வெளிவரும் செல்போன்கள் அனைத்துமே இது போன்ற வாய்ஸ் ரெக்கார்டிங் கொண்டிருப்பது ஒரு பயமுறுத்தும் செய்தி. "நேரில் காதுள் பேசு. போனில் அதுவும் பேசாதே" என புதுசாய் சொற்றொடர் உருவாக்கவேண்டியுள்ளது.
அப்படியே எசகு பிசகாய் எதாவது ஆர்வக்கோளாரில் பேசினாலும் பேசும்போது கவனமாய் போனில் பேசவும். முக்கியமாய் "அது" போன்ற பேச்சுகளிடையே உங்கள் விலாசம், பெயர், மொபைல்நம்பர் போன்ற தகவல்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
இதை தெரிஞ்சு உசாராக ஒரு சாம்பிள் தேவையா என்ன?
"குரு பெயர்ச்சி பலன்கள்" தமிழில் மென்புத்தகம் Guru Peyarchi Tamil Astrology e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/i21hm1qcgdm62.pdf
"சனி பெயர்ச்சி பலன்கள்" தமிழில் ஜோதிட மென்புத்தகம் Sani Peyarchi Tamil Jothidam e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/2vaug4vsz1d7b.pdf
Posted by
PKP
at
12/19/2007 11:52:00 AM
4
comments
Labels: Security